NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்

    சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2024
    10:58 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

    ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டு உதை பட்டு உயிரிழந்து போயிருக்கின்றனர்.

    ஒரு பிரபலமான சாமியார் சென்ற காரினால் கிளறப்பட்ட புழுதியை சேகரிக்க சென்றதனால் இந்த மாபெரும் அவலம் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்பாட்டாளர்களின் மெத்தனமும், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததும் இந்த அவலத்திற்கு மேலும் பங்களித்தன.

    போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் ஹரி (எ) சூரஜ் பால் நேற்று உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.

    இந்தியா 

    நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு

    அவரது சொற்பொழிவு நடந்த இடத்தில் இந்த அவலமான சம்பவம் நடந்துள்ளது.

    இந்நிலையில், போலே பாபாவின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

    FIR இன் படி, அந்த சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவர் என்று கூறி அனுமதி கோரி இருக்கின்றனர். ஆனால் அவரது சொற்பொழிவிற்கு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருக்கின்றனர்.

    மேலும், அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

    கூட்டம் முடிந்து, அந்த சாமியார் வெளியேறும் போது, ​​அவரது காரின் டயர் பாதையில் இருந்த மண்ணை சேகரிக்க அவரது சீடர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    உத்தரப்பிரதேசம்

    'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ் அயோத்தி
    தமிழ்நாட்டிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது; வைரலாகும் காணொளி  அயோத்தி
    பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோவிலுக்கு உள்ளிருந்த எடுக்கப்பட்ட முதல் வீடியோ  அயோத்தி
    விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியீடு  அயோத்தி

    இந்தியா

    நீட் தேர்வு மோசடி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ  சிபிஐ
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்  டெல்லி
    மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்  பிரதமர் மோடி
    'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு  மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025