LOADING...
பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிமுகம் 
எந்த வகையான ஆடைகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்

பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிமுகம் 

எழுதியவர் Sindhuja SM
Oct 10, 2023
12:05 pm

செய்தி முன்னோட்டம்

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஆடைக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஆடைக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஜனவரி 1, 2024 முதல் கோவிலுக்குள் ஆடைக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும். கோவிலின் 'சிங்க துவாரில்' இருக்கும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது" என்று ஸ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாகத் தலைவர் ரஞ்சன் குமார் தாஸ் தெரிவித்துள்ளார். கோவிலுக்குள் சிலர் "அநாகரீகமான" உடைகளை அணிந்து வந்ததை அடுத்து, ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ந்ச்ஜ்வ்ல்

எந்த வகையான ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும்?

"கோவிலின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பது எங்கள் பொறுப்பு. துரதிர்ஷ்டவசமாக, சிலர் மற்றவர்களின் மத உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் கோவிலுக்குச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது," என்று ரஞ்சன் குமார் தாஸ் தெரிவித்துள்ளார். "சிலர் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், ஸ்லீவ்லெஸ் டிரஸ், அரைக் கால்சட்டை போன்றவற்றை அணிந்து கொண்டு, கடல் கடற்கரையிலோ, பூங்காவிலோ உலா வருவது போல் கோவிலில் காணப்பட்டனர். கோவில் கடவுளின் இருப்பிடம், பொழுதுபோக்கிற்கான இடம் அல்ல,'' என்றும் அவர் கூறியுள்ளார். எந்த வகையான ஆடைகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தாஸ் தெரிவித்துள்ளார். ஜனவரி 1, 2024 முதல் அரைக்கால், ஷார்ட்ஸ், கிழிந்த ஜீன்ஸ், பாவாடை, ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணிந்தவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.