NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைக்க முடிவு

    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது

    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளி பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஜவுளி பூங்காவானது தமிழகத்தின் விருதுநகர் இ.குமாரலிங்கபுரம் மாவட்டத்தில் அமையவுள்ளது.

    இதற்கான நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர், இந்தியாவின் முதல் ஜவுளிபூங்கா தமிழகத்தில் அதுவும் விருதுநகரில் அமையவுள்ளது.

    ஜவுளி வர்த்தகம் மிக முக்கியமானது.

    இதன்மூலம் தமிழகம் தொழில்துறையில் உலகளவில் கவனத்தினை ஈர்த்துள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழிலாக நெசவுதொழில் திகழ்ந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    துவக்க விழா

    11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

    மேலும் இந்த பூங்காவில் தொழில் துவங்க 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும் என மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில்,

    இந்த மெகா ஜவுளி பூங்காவை பெறுவதற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

    தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக முதல் ஜவுளி பூங்காவினை தமிழகம் பெற்றுள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து அவர், விவசாயத்துக்கு அடுத்தபடியாக 4 கோடி பேருக்கு நேரடியாகவும், 6 கோடி பேருக்கு மறைமுகமாகவும் ஜவுளித்துறை வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    மு.க ஸ்டாலின்
    சென்னை

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் தமிழ்நாடு
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    சென்னை

    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை தமிழ்நாடு
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் போக்குவரத்து காவல்துறை
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா
    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025