NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு
    திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு
    இந்தியா

    திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு

    எழுதியவர் Nivetha P
    September 06, 2023 | 07:56 pm 1 நிமிட வாசிப்பு
    திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு
    திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு

    தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ்துறை ஆய்வுக்குழுவில் உள்ளோர் கள ஆய்வுகள் மூலம் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணில் அடங்கா பல வரலாற்று தடையங்களை கண்டறிந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தமானது கோவையிலுள்ள 'யாக்கை' அறக்கட்டளையுடன் கையெழுத்தானது என தெரிகிறது. அதனை தொடர்ந்து, திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ் துறை ஆய்வு குழுவினர் மற்றும் சமூக ஆர்வலரான ராதா கிருஷ்ணன் அளித்துள்ள தகவல்படி திருப்பத்தூரினை அடுத்துள்ள சோமலாபுரம் அருகேயுள்ள விவசாய நிலத்தில் ஒரு கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், 'யாக்கை' அறக்கட்டளை குழுவினருடன் இணைந்து நடத்திய களஆய்வின் முயற்சியில் இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது என்று தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்துறை ஆய்வுக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தை சேர்ந்தது என கண்டறிய இயலவில்லை 

    இதனைத்தொடர்ந்து தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஐந்தரை அடி நீளம், மூன்றரை அடி அகலம் கொண்ட பலகை கல்லில் வடிக்கப்பட்டுள்ளது என்று ஆராயப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதில் 17 வரிகள் எழுதப்பட்டுள்ளது. அந்த வரிகள் அனைத்தும் தமிழ், வடமொழி, கிரந்து உள்ளிட்டவற்றை கலந்து எழுதப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனிடையே இக்கல்வெட்டானது திறந்தவெளியில் பல காலங்களாக எவ்வித பாதுகாப்புமின்றி இருந்த காரணத்தினால் அதிலிருந்த எழுத்துக்கள் உராய்வு ஏற்பட்டு மங்கலாக காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கல்வெட்டில் மாவுப்பூச்சு பூசப்பட்டு,படி எடுக்கப்பட்டு அதன்பின்னர் ஆய்வுக்குழுவினரால் படிக்கப்பட்டது. எனினும் கல்வெட்டு தெளிவாக இல்லாததால் எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில் இது பொறிக்கப்பட்டது என்னும் விவரம் கண்டறிய முடியவில்லை. ஆனால் எழுத்துக்களின் அமைப்புகள் கொண்டு இந்த கல்வெட்டு 17ம்-நூற்றாண்டினை சேர்ந்தது என்பது தெளிவாகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம் - வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம் தீட்டி அசத்தும் சிறுமி இந்தியா
    காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் கர்நாடகா
    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை மு.க ஸ்டாலின்
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    மாவட்ட செய்திகள்

    120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை  தமிழ்நாடு
    ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்: வேலூரில் பல லட்சம் லிட்டர் பால் திருட்டு தமிழகம்
    ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை!  இந்தியா
    யோகா போட்டியில் 23 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்கள் வென்ற கோவை சிறுவன்!  கோவை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023