NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?
    மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பழங்குடியின மக்கள்தொகைக்கு பெயர் பெற்றதாகும்.

    ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 16, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மூன்று மாதங்களில், மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார் சிவில் மருத்துவமனையில் 179 குழந்தைகள் இறந்துள்ளன.

    குறைவான எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல காரணிகளால் அந்த குழந்தைகள் உயிரிழந்ததாக நந்தூர்பாரின் தலைமை மருத்துவ அதிகாரி, எம் சவான் குமார் காரணம் காட்டியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பழங்குடியின மக்கள்தொகைக்கு பெயர் பெற்றதாகும்.

    இந்த மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளில் 70 சதவீதம் குழந்தைகள் பிறந்து 0-28 நாட்களுக்குள்ளேயே உயிரிழந்துள்ளன என்பது குறிப்பாகக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

    மகாராஷ்டிராவிலேயே அதிக ஊட்டச்சத்து குறைபாடு விகிதத்தை கொண்ட மாவட்டமும் இது தான்.

    ட்னவ்க்

    போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு 

    குறைப்பிரசவம், குறைவான எடை, பாம்புக்கடி, பிரசவத்தின் போது ஏற்படும் செப்சிஸ், நிமோனியா மற்றும் விபத்துக்கள் போன்ற எண்ணற்ற காரணங்களால் இந்த பகுதியில் குழந்தை இறப்பு அதிகரித்து வருகிறது.

    சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பு இல்லாதது, வெகுஜன இடம்பெயர்வு மற்றும் வீட்டுப் பிரசவங்கள் போன்றவை இதில் 20 சதவீத உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது என்று எம் சவான் குமார் கூறியுள்ளார்.

    ஜூலை மாதத்தில், இந்த மருத்துவமனையில் 75 குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன.

    இது ஆகஸ்ட் மாதத்தில் 86 ஆக அதிகரித்துள்ளது.

    செப்டம்பர் மாதத்தில் இதுவரை 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

    உள்ளூர் எம்எல்ஏ அம்சா பத்வி, போதிய வசதிகள் இல்லாததால், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    இந்தியா

    ஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன? ஜி20 மாநாடு
    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்  அமெரிக்கா
    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை
    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? சவுதி அரேபியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025