NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?
    ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?
    இந்தியா

    ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    September 16, 2023 | 05:42 pm 1 நிமிட வாசிப்பு
    ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?
    மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பழங்குடியின மக்கள்தொகைக்கு பெயர் பெற்றதாகும்.

    கடந்த மூன்று மாதங்களில், மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார் சிவில் மருத்துவமனையில் 179 குழந்தைகள் இறந்துள்ளன. குறைவான எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல காரணிகளால் அந்த குழந்தைகள் உயிரிழந்ததாக நந்தூர்பாரின் தலைமை மருத்துவ அதிகாரி, எம் சவான் குமார் காரணம் காட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பழங்குடியின மக்கள்தொகைக்கு பெயர் பெற்றதாகும். இந்த மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளில் 70 சதவீதம் குழந்தைகள் பிறந்து 0-28 நாட்களுக்குள்ளேயே உயிரிழந்துள்ளன என்பது குறிப்பாகக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும். மகாராஷ்டிராவிலேயே அதிக ஊட்டச்சத்து குறைபாடு விகிதத்தை கொண்ட மாவட்டமும் இது தான்.

    போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு 

    குறைப்பிரசவம், குறைவான எடை, பாம்புக்கடி, பிரசவத்தின் போது ஏற்படும் செப்சிஸ், நிமோனியா மற்றும் விபத்துக்கள் போன்ற எண்ணற்ற காரணங்களால் இந்த பகுதியில் குழந்தை இறப்பு அதிகரித்து வருகிறது. சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பு இல்லாதது, வெகுஜன இடம்பெயர்வு மற்றும் வீட்டுப் பிரசவங்கள் போன்றவை இதில் 20 சதவீத உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது என்று எம் சவான் குமார் கூறியுள்ளார். ஜூலை மாதத்தில், இந்த மருத்துவமனையில் 75 குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன. இது ஆகஸ்ட் மாதத்தில் 86 ஆக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. உள்ளூர் எம்எல்ஏ அம்சா பத்வி, போதிய வசதிகள் இல்லாததால், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    இந்தியா

    சமீபத்திய

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில்  நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு அமெரிக்கா

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' பட பாணியில் கொள்ளை சம்பவம் கொள்ளை
    இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம் இந்தியா
    ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம் மும்பை
    தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு சிவசேனா

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா? முதலீடு
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்  மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023