NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு 
    அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

    அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 16, 2023
    10:38 am

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் இமயமலை தொடரில் 3,880மீ.,உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக்கோயில்.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாக உருவாகும் லிங்கத்தினை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு ஜூலை 1ம்தேதி துவங்கிய இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 31ம்தேதியோடு நிறைவடைகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத்திலிருந்து அமர்நாத் புனித யாத்திரையினை மேற்கொண்டு திரும்புகையில் வழியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ஸ்ரீநகருக்கு செல்லும் பாதையானது முற்றிலும் சேதமடைந்த காரணத்தினால் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.

    அவ்வாறு அங்கு சிக்கித்தவித்த முருகானந்தம், செல்வி, செல்லப்பாண்டி, செந்தில் குமார், ராஜாங்கம், கீதா, சங்கர், கலைவாணி, சாவித்திரி, சந்திரசேகரன், அமுதா, ராஜேஷ்குமாரி, ராகினி, உள்ளிட்ட 17 நபர்களின் விவரமானது தமிழகஅரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    யாத்திரை 

    அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் 

    அதன்பின்னர், தமிழக முதல்வர் அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டதாக தெரிகிறது.

    அதன் பேரில் அங்கு சிக்கி தவித்த 17 பேரும் பத்திரமாக அங்கிருந்து மீட்கப்பட்டு புதுடெல்லியில் உள்ள தமிழர் இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கடந்த 13ம் தேதியன்று தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    அங்கிருந்து அவர்களுக்கு பயணசீட்டுக்கள் கொடுக்கப்பட்டு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரான மஸ்தான் மற்றும் அரசு அலுவலர்கள் வரவேற்று அவர்களது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீர்
    தேனி
    அமர்நாத்

    சமீபத்திய

    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி

    தமிழ்நாடு

    'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி கர்நாடகா
    உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்  ஸ்டாலின்
    அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம் ஜெயலலிதா

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    தேனி

    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை மாவட்ட செய்திகள்
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்

    அமர்நாத்

    அமர்நாத் யாத்திரையில் பூரி, பிரைடு ரைஸ், தோசைக்கு தடை  அமர்நாத் யாத்திரை
    பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவக்கம்  அமர்நாத் யாத்திரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025