Page Loader
இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு 
இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு

இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு 

எழுதியவர் Nivetha P
Oct 19, 2023
02:23 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், அப்பகுதிகளில் சிக்கிய தமிழர்கள் தொடர்புக்கொள்ள தமிழக அரசு உதவி எண்களை அறிவித்தது. அந்த உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கி செய்வதறியாது தவித்த 158 தமிழர்களின் நிலவரம் குறித்த தகவல்கள் தெரியவந்தது என்று கூறப்படுகிறது. அவர்களின் தேவைகள் அயலக தமிழர் நலத்துறை மூலம் கேட்டறியப்பட்ட நிலையில் 4 கட்டங்களாக 98 தமிழர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு தங்கள் இல்லங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம்(அக்.,17) மீண்டும் தமிழக அரசு சார்பில் 23 பேர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆபரேஷன் அஜய் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்ட இந்த 23 பேர் தமிழக அரசால் வரவேற்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

இஸ்ரேல் 

தமிழக அரசின் செலவில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு 

தொடர்ந்து, அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விமான பயணச்சீட்டுகளும் வழங்கப்பட்டது. அதன்படி சென்னை விமானநிலையம் வந்தடைந்த 17பேரை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், துறை அலுவலர்கள், எம்.பி.கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அதேப்போல் கோவை விமானநிலையம் சென்றடைந்த 4பேரை அமைச்சர்.,கே.எஸ்.மஸ்தான் வரவேற்று அரசின் செலவில் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுத்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, மதுரை சென்றடைந்த 2பேரைஅம்மாவட்ட நிர்வாகம் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுவரை இஸ்ரேலிலிருந்து 121 தமிழர்கள் தமிழகஅரசு சார்பிலும், 26 பேர் தங்கள் சொந்த செலவில் என மொத்தம் 147பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர் என்று அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.