NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள்

    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 

    எழுதியவர் Nivetha P
    Sep 17, 2023
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பெரியாருக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ராமசாமி.

    இவருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் தனது படிப்பினை 12வது வயதில் நிறுத்திய பெரியார், வியாபாரத்தினை கவனிக்க துவங்கியுள்ளார்.

    பின்னர் தனது 19வது வயதில் நாகம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை சில மாதங்களிலேயே இறந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.

    ஆரம்பத்தில் காந்தி கொள்கையை பின்பற்றி வந்த பெரியார் 1919ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    ஆனால் கல்விக்கான இடஒதுக்கீடு, அரசுப்பணிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததால் 1925ம் ஆண்டு அவர் காங்கிரஸில் இருந்து பிரிந்தார்.

    திருமணம் 

    தீண்டாமைக்கு எதிராக போராடிய பெரியார் 

    அதன்பின்னர் ராஜாஜியுடன் இணைந்து கடைசிவரை நட்பு பாராட்டிய அவர், சாதி ஒழிப்பு, தீண்டாமை, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளின் பேரில் தீவிரமாக செயல்பட்டார்.

    இதனிடையே அவர் தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.

    சமூகத்தில் சரிபாதி உரிமையுள்ள பெண்களின் கைகளில் உள்ள கரண்டிகளை பிடிங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள் என்று உரக்க கூறிவந்தார்.

    தனது கழகத்திற்கு ஓர் வாரிசு வேண்டும் என்று எண்ணினார்.

    ஆனால் அவரது மனைவி இறந்துவிட்ட காரணத்தினால், நாகம்மையை பெரியார் தத்தெடுக்க முடிவு செய்தார்.

    ஆனால் அப்போதைய இந்திய சட்டப்படி பெண்களுக்கு தத்தெடுக்கவும், தத்து போகவும் உரிமை இல்லாத காரணத்தினால் அவர் தன்னை விட 40 வயது சிறிய நாகம்மையை திருமணம் செய்து கொண்டார்.

    அதிருப்தி 

    1973ம் ஆண்டு பூவுலகை விட்டு பிரிந்த பெரியார் 

    இது அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் தனியே பிரிந்துச்சென்று திராவிட முன்னேற்ற கழகத்தினை துவங்கி தேர்தலில் போட்டியிட துவங்கினர் என்பதே வரலாறு.

    ஆனால் தன் மீதான இந்த விமர்சனங்கள் எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத பெரியார் தனது 94 வயது வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைத்த வண்ணம் இருந்தார்.

    இதனைத்தொடர்ந்து அவர் 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    வாழ்த்து 

    தமிழக முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் 

    பெரியார் இம்மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரது கருத்துக்களும், கொள்கைகளும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று(செப்.,17) பெரியாரின் 145வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனிடையே, அவருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு மரியாதை செலுத்தி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அவரை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 'மூடநம்பிக்கை, அறியாமை என்னும் சங்கிலிகளை உடைத்தெறிய கல்வியே ஆயுதம் என கூறியவர் பெரியார். சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு பாடுபட்ட சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்' என்று தெரிவித்துள்ளார்.

    நீதி 

    சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாள் 

    மேலும், நடிகரும்-மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், "பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது என்பது பேரழிவு. இதனை கடைசிவரை பிரச்சாரம் செய்து வந்தவர் பெரியார்.

    சமத்துவத்தினை ஸ்வாசமாக கொண்டு வாழ்ந்த பெரியாரின் பிறந்தநாளான இன்று அவரது கருத்துக்களை நினைவுக்கூருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வரும் நிலையில், அவருடைய பிறந்ததினம் 'சமூக நீதி தினம்' என்னும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி நாமக்கல்லில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது.

    இதுபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, பல நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்
    ஈரோடு
    பயணம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழ்நாடு

    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை! இஸ்ரோ
    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

    மு.க ஸ்டாலின்

    'ஜெயிலர்' திரைப்படம் - இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்  ஜெயிலர்
    ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சென்னை
    தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு திருச்சி
    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்  நீட் தேர்வு

    ஈரோடு

    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் தேர்தல்
    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் தேர்தல்
    ஈரோடு இடைத்தேர்தல் - வரும் 24ம் தேதி பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    ஈரோடு இடைத்தேர்தல்-5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல்

    பயணம்

    புக் செய்த ட்ரெயின் டிக்கெட்டின் தேதியை மாற்ற வேண்டுமா? விவரம் உள்ளே ரயில்கள்
    ஹஜ் பயணத்திற்கு போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் உலகம்
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம் ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025