NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 
    இந்தியா

    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 

    எழுதியவர் Nivetha P
    September 17, 2023 | 11:59 am 1 நிமிட வாசிப்பு
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள்

    ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பெரியாருக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ராமசாமி. இவருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது படிப்பினை 12வது வயதில் நிறுத்திய பெரியார், வியாபாரத்தினை கவனிக்க துவங்கியுள்ளார். பின்னர் தனது 19வது வயதில் நாகம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை சில மாதங்களிலேயே இறந்து விட்டது என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் காந்தி கொள்கையை பின்பற்றி வந்த பெரியார் 1919ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் கல்விக்கான இடஒதுக்கீடு, அரசுப்பணிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததால் 1925ம் ஆண்டு அவர் காங்கிரஸில் இருந்து பிரிந்தார்.

    தீண்டாமைக்கு எதிராக போராடிய பெரியார் 

    அதன்பின்னர் ராஜாஜியுடன் இணைந்து கடைசிவரை நட்பு பாராட்டிய அவர், சாதி ஒழிப்பு, தீண்டாமை, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளின் பேரில் தீவிரமாக செயல்பட்டார். இதனிடையே அவர் தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். சமூகத்தில் சரிபாதி உரிமையுள்ள பெண்களின் கைகளில் உள்ள கரண்டிகளை பிடிங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள் என்று உரக்க கூறிவந்தார். தனது கழகத்திற்கு ஓர் வாரிசு வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவரது மனைவி இறந்துவிட்ட காரணத்தினால், நாகம்மையை பெரியார் தத்தெடுக்க முடிவு செய்தார். ஆனால் அப்போதைய இந்திய சட்டப்படி பெண்களுக்கு தத்தெடுக்கவும், தத்து போகவும் உரிமை இல்லாத காரணத்தினால் அவர் தன்னை விட 40 வயது சிறிய நாகம்மையை திருமணம் செய்து கொண்டார்.

    1973ம் ஆண்டு பூவுலகை விட்டு பிரிந்த பெரியார் 

    இது அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் தனியே பிரிந்துச்சென்று திராவிட முன்னேற்ற கழகத்தினை துவங்கி தேர்தலில் போட்டியிட துவங்கினர் என்பதே வரலாறு. ஆனால் தன் மீதான இந்த விமர்சனங்கள் எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத பெரியார் தனது 94 வயது வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைத்த வண்ணம் இருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    தமிழக முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் 

    பெரியார் இம்மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரது கருத்துக்களும், கொள்கைகளும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(செப்.,17) பெரியாரின் 145வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, அவருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு மரியாதை செலுத்தி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. அவரை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 'மூடநம்பிக்கை, அறியாமை என்னும் சங்கிலிகளை உடைத்தெறிய கல்வியே ஆயுதம் என கூறியவர் பெரியார். சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு பாடுபட்ட சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்' என்று தெரிவித்துள்ளார்.

    சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாள் 

    மேலும், நடிகரும்-மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், "பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது என்பது பேரழிவு. இதனை கடைசிவரை பிரச்சாரம் செய்து வந்தவர் பெரியார். சமத்துவத்தினை ஸ்வாசமாக கொண்டு வாழ்ந்த பெரியாரின் பிறந்தநாளான இன்று அவரது கருத்துக்களை நினைவுக்கூருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வரும் நிலையில், அவருடைய பிறந்ததினம் 'சமூக நீதி தினம்' என்னும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாமக்கல்லில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, பல நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்
    ஈரோடு
    பயணம்
    கருணாநிதி
    கமல்ஹாசன்
    காங்கிரஸ்
    மல்லிகார்ஜுன் கார்கே

    சமீபத்திய

    தமிழ்நாடு

    பொது இடங்களில் இரத்த தான மையம், பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு விருதுநகர்
    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம் டெங்கு காய்ச்சல்

    மு.க ஸ்டாலின்

    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  திமுக
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு தமிழக அரசு
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பணியாளர்களை பாராட்டிய முதல்வர்  ட்விட்டர்
    வரதராஜ பெருமாள் கோயில் - பூரண கும்ப மரியாதையை ஏற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம்

    ஈரோடு

    சேலம் சங்கரகிரி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு விபத்து
    இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி சென்னை உயர் நீதிமன்றம்
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம் தமிழ்நாடு

    பயணம்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்: இணையதளம் மூலம்  பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம் தமிழ்நாடு
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் சென்னை
    சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன? சுற்றுலா
    சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்த விமானக் கட்டணங்கள் விமான சேவைகள்

    கருணாநிதி

    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை மு.க ஸ்டாலின்
    நண்பர்கள் தினம் : அரசியலில் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் நட்பு பாராட்டிய அரசியல் தலைவர்கள் நட்பு
    மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்  தமிழக அரசு
    கலைஞர் நூற்றாண்டு பிரம்மாண்ட நூலகத்தின் சிறப்பம்சங்கள்  மதுரை

    கமல்ஹாசன்

    'பிக் பாஸ்' சீசன் 7 : அக்டோபர் 1ம் தேதி முதல் ஆரம்பம்  விஜய் டிவி
    தமிழ் சினிமாவில் பெயர்பெற்ற குரு-சிஷ்ய ஜோடிகள் ஆசிரியர்கள் தினம்
    பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம் சினிமா
    சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள்  லோகேஷ் கனகராஜ்

    காங்கிரஸ்

    5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம்  தெலுங்கானா
    நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ் ஹரியானா
    கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள் பாஜக
    குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்  இந்தியா

    மல்லிகார்ஜுன் கார்கே

    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்
    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மதுரை
    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    'பிரதமரை தேவையில்லாமல் புகழ்ந்து பேசக்கூடாது': காங்கிரஸ் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை காங்கிரஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023