NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம்
    இடிபாடுகள் வழியாக 24 மீட்டர் துளையிட்டுள்ள மீட்பு குழுவினர்.

    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம்

    எழுதியவர் Srinath r
    Nov 17, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க, 120 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு குழுவினர் போராடிவரும் நிலையில், அவர்களின் உடல் மற்றும் மனநலம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.

    கடந்த நவம்பர் 12ஆம் தேதி, கட்டுமானத்தில் இருந்த சில்க்யாரா சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

    தாய்லாந்து மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த சிறப்பு மீட்பு குழுவினர், தற்போது நடந்து வரும் மீட்பு பணிகளில் இணைந்துள்ளனர். மேலும் 'அமெரிக்கன் ஆகர்' என்ற மீட்பு கருவியும் பணியமர்த்தப்பட்டுள்ளது.

    இடிந்த சுரங்கத்தில் இடிபாடுகள் வழியாக 24 மீட்டர் துளையிட்டு, நான்கு குழாய்களை பொருத்தி, தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் ஆக்ஸிஜனை மீட்பு குழுவினர் வழங்கி வருகின்றனர்.

    2nd card

    தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலம் குறித்து கவலை தெரிவிக்கும் மருத்துவர்கள்

    சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களுக்கு, விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நீண்ட காலம் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பது, அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    சுரங்கத்திற்குள் நீண்ட நேரம் சிக்கி இருப்பது தொழிலாளர்களுக்கு, "பேனிக் அட்டாக் என்னும் பேரச்ச தாக்கை" ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

    மேலும், சுரங்கத்தில் இருக்கும் பிராணவாயு மற்றும் கரிய அமிலவாயுவின் அளவுகள் தொழிலாளர்களின் உடல் நிலையை பாதிக்கலாம் என்றும், குளிர்ந்த நிலத்தடி வெப்பநிலை ஹைபோதெர்மியாவை உண்டாக்கலாம் என நொய்டாவை சேர்ந்த மருத்துவர் அகர்வால் பிடிஐ இடம் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    உடல் நலம்
    மன அழுத்தம்
    தாய்லாந்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    உடல் நலம்

    மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள் உடற்பயிற்சி
    யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள் யோகா
    ஜோஜோபா எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!  ஹெல்த் டிப்ஸ்
    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத்தெரியுமா? ஆரோக்கியம்

    மன அழுத்தம்

    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள் யோகா
    பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும் மன ஆரோக்கியம்
    'சிரிப்பே மருந்து': உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிரிப்பு வைத்தியம்! மன ஆரோக்கியம்

    தாய்லாந்து

    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  தமிழக அரசு
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? உலகம்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் தமிழ்நாடு
    தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025