NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / துப்புரவு பெண் தொழிலாளர்கள் வாங்கிய ரூ.250 லாட்டரி சீட்டுக்கு, ரூ.10 கோடி பரிசு! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    துப்புரவு பெண் தொழிலாளர்கள் வாங்கிய ரூ.250 லாட்டரி சீட்டுக்கு, ரூ.10 கோடி பரிசு! 
    துப்புரவு பெண் தொழிலாளர்கள் இணைந்து வாங்கிய லாட்டரி சீட்டு - ரூ.10 கோடி பரிசுத்தொகை

    துப்புரவு பெண் தொழிலாளர்கள் வாங்கிய ரூ.250 லாட்டரி சீட்டுக்கு, ரூ.10 கோடி பரிசு! 

    எழுதியவர் Nivetha P
    Jul 28, 2023
    01:57 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடையுள்ள நிலையில், கேரளா, பஞ்சாப், அசாம், சிக்கிம், போன்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் உள்ளது.

    இந்நிலையில் கேரளா-மலப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த ஹரிதா கர்மா சேனா என்னும் குழுவினை சேர்ந்த துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் 11 பெண்கள் இணைந்து, லாட்டரி சீட்டு ஒன்றினை வாங்க முடிவுச்செய்துள்ளனர்.

    அதன்படி ரூ.250 மதிப்புள்ள லாட்டரி சீட்டினை வாங்க இவர்கள் கூட்டாக காசினை சேகரித்துள்ளனர்.

    அப்போது ரூ.12.50குறைந்த நிலையில் இவர்கள் 11வது நபராக ஒரு பெண்ணை சேர்த்து டிக்கெட்டினை வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து, 9 பேர் தலா ரூ.25 கொடுத்த நிலையில், மற்ற இருவர் ரூ.12 போட்டு வாங்கிய லாட்டரிச்சீட்டில் தற்போது அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது.

    லாட்டரி 

    பரிசுத்தொகை கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி - துப்புரவு ஊழியர்கள்

    இது குறித்து பரிசு வென்ற பெண்களுள் ஒருவர் கூறுகையில், "இதுவரை 4 முறை இதுபோல் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளோம். ஆனால் பரிசு எதுவும் விழவில்லை" என்று கூறியுள்ளார்.

    மேலும் மிகவும் பின்தங்கிய சூழலில் உள்ள தங்களுக்கு இந்த பரிசுத்தொகை கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

    மழைக்கால பம்பர் பரிசு என்னும் டிக்கெட்டினை தான் இவர்கள் ரூ.250க்கு வாங்கியுள்ளார்கள் என்று தெரிகிறது.

    இந்த சீட்டிற்கு 2வது பரிசாக ரூ.10 லட்சம் , 3வது பரிசாக ரூ.5 லட்சம், 4வது பரிசாக ரூ.3 லட்சம் தலா 5 பேருக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கேரளா

    சமீபத்திய

    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா

    தமிழ்நாடு

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் இந்தியா
    அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு  ஜம்மு காஷ்மீர்
    மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம்  சேலம்
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு  ஆடி

    கேரளா

    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  பினராயி விஜயன்
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக
    வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!  ஸ்மார்ட்போன்
    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025