NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்
    இந்தியா

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்
    எழுதியவர் Nivetha P
    Mar 16, 2023, 12:28 pm 0 நிமிட வாசிப்பு
    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்
    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்

    சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று(மார்ச்.,16) திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்று கூறியுள்ளனர். இதனைகேட்டு அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் 10ம்வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் இருந்துள்ளான். அவன் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு பாடத்தில் சந்தேகம் கேட்பதாக கூறி வந்து சென்றுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ள நிலையில், இருவரும் 10ம் வகுப்பு படிப்பதால் அவர்கள் பெற்றோர்களும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    மாணவியின் கர்ப்பத்தை கலைப்பது குறித்து மருத்துவர்கள் பெற்றோருடன் ஆலோசனை

    இந்நிலையில் இவர்கள் மத்தியில் இருந்த உறவு எல்லை மீறியதையடுத்து, 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்கள். இதனையடுத்து அந்த மாணவி கர்பமாகியுள்ளார். மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்கள். அதனையடுத்து அந்த மாணவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது கர்ப்பத்தை கலைப்பது குறித்து அவரது பெற்றோரும், மருத்துவர்கள் மற்றும் குழந்தை நல அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அடுத்த மாதம் 2 பேருக்கும் பொது தேர்வு துவங்கவுள்ள நிலையில் அந்த மாணவனை கைது செய்வது குறித்தும் குழந்தை நல அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    பள்ளி மாணவர்கள்
    சேலம்

    பள்ளி மாணவர்கள்

    தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!  தமிழ்நாடு
    தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர் தமிழ்நாடு
    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உறுதி செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    சேலம்

    சேலம் ஆவின் பால் பண்ணை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ்  தமிழ்நாடு
    அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்!  இந்தியா
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023