NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்
    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்

    எழுதியவர் Nivetha P
    Mar 16, 2023
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று(மார்ச்.,16) திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

    அதனால் அவரை பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்று கூறியுள்ளனர்.

    இதனைகேட்டு அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

    இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் 10ம்வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் இருந்துள்ளான்.

    அவன் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு பாடத்தில் சந்தேகம் கேட்பதாக கூறி வந்து சென்றுள்ளார்.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ள நிலையில், இருவரும் 10ம் வகுப்பு படிப்பதால் அவர்கள் பெற்றோர்களும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

    கைது செய்ய ஆலோசனை

    மாணவியின் கர்ப்பத்தை கலைப்பது குறித்து மருத்துவர்கள் பெற்றோருடன் ஆலோசனை

    இந்நிலையில் இவர்கள் மத்தியில் இருந்த உறவு எல்லை மீறியதையடுத்து, 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்கள்.

    இதனையடுத்து அந்த மாணவி கர்பமாகியுள்ளார்.

    மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்கள்.

    அதனையடுத்து அந்த மாணவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது கர்ப்பத்தை கலைப்பது குறித்து அவரது பெற்றோரும்,

    மருத்துவர்கள் மற்றும் குழந்தை நல அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

    அடுத்த மாதம் 2 பேருக்கும் பொது தேர்வு துவங்கவுள்ள நிலையில் அந்த மாணவனை கைது செய்வது குறித்தும் குழந்தை நல அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025