NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

    எழுதியவர் Nivetha P
    Mar 01, 2023
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

    அதில், கொரோனா பரவல் காரணமாக 2020-21ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது.

    இதனால் 9,30,000 மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதனை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டு, 9ம் வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

    தொடர்ந்து தற்போது, ரயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்தி 769 பேருக்கு பணியிடங்கள், குரூப் டி பணியிடங்கள், 40,889 தபால் துறை பணியிடங்கள், பெங்களூர் ரயில் வீல் தொழிற்சாலையில் 4,103 அப்பரண்டிஸ் பணிகள் ஆகியவற்றிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    வழக்கு தள்ளுபடி

    தேர்வு நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்க முடியாது

    மேற்கூறிய குறிப்பிட்ட பணிகளில் விண்ணப்பிக்கவும், சேரவும் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம். எனவே, மதிப்பெண்கள் கொடுக்கப்பட்ட சான்றிதழை அளிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான வழக்கறிஞர், இது போன்ற ஏற்கனவே ஓர் வழக்கில் தேர்வு நடத்தாமல் மதிப்பெண்கள் அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எடுத்துரைத்தார்.

    அவர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    கொரோனா

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025