NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
    இந்தியா

    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
    எழுதியவர் Nivetha P
    Mar 01, 2023, 05:46 pm 1 நிமிட வாசிப்பு
    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

    சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா பரவல் காரணமாக 2020-21ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் 9,30,000 மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டு, 9ம் வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். தொடர்ந்து தற்போது, ரயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்தி 769 பேருக்கு பணியிடங்கள், குரூப் டி பணியிடங்கள், 40,889 தபால் துறை பணியிடங்கள், பெங்களூர் ரயில் வீல் தொழிற்சாலையில் 4,103 அப்பரண்டிஸ் பணிகள் ஆகியவற்றிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்க முடியாது

    மேற்கூறிய குறிப்பிட்ட பணிகளில் விண்ணப்பிக்கவும், சேரவும் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம். எனவே, மதிப்பெண்கள் கொடுக்கப்பட்ட சான்றிதழை அளிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர், இது போன்ற ஏற்கனவே ஓர் வழக்கில் தேர்வு நடத்தாமல் மதிப்பெண்கள் அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எடுத்துரைத்தார். அவர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கொரோனா
    சென்னை உயர் நீதிமன்றம்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு இந்தியா
    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம் மாரடைப்பு

    சென்னை உயர் நீதிமன்றம்

    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆயுர்வேதம்
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்  தமிழ்நாடு
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023