NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
    லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    எழுதியவர் Sayee Priyadarshini
    Jan 21, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ராணுவம், லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக சிறப்பு தேர்வு வாரியத்தை நடத்தி வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    தி ஹிந்துவில் இதைப்பற்றிய முழு கவரேஜ் இங்கே.

    இது ஜனவரி-9 முதல் ஜனவரி-22 வரை நடத்தப்படுகிறது. ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவை பிரிவுகளில் இருக்கும் காலி இடங்களுக்கு இந்த சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது.

    1992 பேட்ச் முதல் 2006 பேட்ச் வரையுள்ள 244 பெண் அதிகாரிகள் 108 காலியிடங்களுக்கு பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்படுகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    மதுரை விமான நிலையத்தின் பிரிவுகள்

    Madurai Airport has been accorded No. 1 in thematic decoration among Category-II airports in India. Thanks to our beloved APD Mr. Rao for making this happen. @aaimduairport @AAI_Official @sureshpprabhu @MoCA_GoI @jayantsinha pic.twitter.com/yOlNufgfpY

    — Madurai Airport (@MaduraiAirport) September 6, 2018

    ராணுவம்

    வரலாற்றில் முதல் முறை

    இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் இந்த சிறப்பு எண்-3 காலியிடங்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

    மொத்தம் 60 பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் தேர்வு வாரியத்திற்கு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். நியாயமான நடத்தையை உறுதிப்படுத்தவும், அவர்களின் அச்சங்கள் ஏதேனும் இருந்தால் தெளிவுபடுத்தவும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்படும் இந்த 108 அதிகாரிகளும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட இருக்கிறார்கள்.

    அத்தகைய பதவிகளின் முதல் தொகுப்பு ஜனவரி 2023 இறுதிக்குள் வழங்கப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெண் அதிகாரிகள் இது போன்ற ராணுவ உயர் பதவிகளில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025