NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு 
    நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

    நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு 

    எழுதியவர் Nivetha P
    May 11, 2023
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர் பேசுகையில், நிலம் கையகப்படுத்த முடியாத நிலை பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடந்த ஒரு ஆண்டாக நிலவி வருகிறது.

    இதனையடுத்து தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5 யூனிட்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு 80 ஹெக்டர் நிலம் கிடைத்தால் போதும். நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சாரத்தினை சீராக உற்பத்தி செய்துவிட முடியும்.

    15 ஆண்டுகளுக்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    நிலக்கரி 

    தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பில்லை என்பதில் உண்மையில்லை

    மேலும் அவர் பேசுகையில், என்.எல்.சி.நிறுவனத்தால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.30காசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதனை வெளிச்சந்தையில் வாங்கினால் ஒரு யூனிட்டிற்கு ரூ.10முதல் ரூ.12வரை வழங்கவேண்டியிருக்கும்.

    இந்நிறுவனத்தால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

    இது முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், நிலம் கையப்படுத்தப்பட்டால் பற்றாக்குறைக்கான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியினை உடனடியாக ஈடு செய்திட முடியும் என்றும் கூறியுள்ளார்.

    இந்நிறுவனத்தில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள்.

    இதில் ஒப்பந்த தொழிலாளர்களில் 95% பேர் தமிழர்கள்.

    அதே போல் நிரந்தர தொழிலாளர்களின் 83% பேரும் தமிழர்கள் தான்.

    தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பில்லை என்பதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கடலூர்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்!  சேலம்
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  காவல்துறை
    வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் புதுச்சேரி
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  வானிலை அறிக்கை

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு காவல்துறை
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025