Page Loader
தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்
சென்னையில் மட்டும் 200 முகாம்கள் நடைபெற இருக்கிறது

தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

எழுதியவர் Sindhuja SM
Mar 07, 2023
01:26 pm

செய்தி முன்னோட்டம்

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல், ஆலோசனை மற்றும் மருந்துச் சீட்டுகள் வழங்குவதற்காக மார்ச் 10 ஆம் தேதி, 1,000 காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல்கள் பதிவாகும் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படும். சென்னையில், 200 வார்டுகளில் உள்ள சமுதாய கூடங்கள் போன்ற பொது இடங்களில் முகாம்களை சென்னை மாநகராட்சி நடத்தும். ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தமிழகம்

ஆண்டிபயாடிக்குகள் அதிகம் பயன்படுத்த வேண்டாம்: மருத்துவர்கள்

செப்டம்பர் 2022 இல் பரவிய பருவகால வைரஸ்கள், இன்னும் முடியாமல் நீடித்து பரவி வருகின்றன. இதனால், கிளினிக்குகளில் நீண்ட வரிசைகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகளால் மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. காய்ச்சல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு விரைவில் மருத்துவம் பார்க்கவும், மக்கள் ஆண்டிபயாடிக்குகளை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதற்கும் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன." என்று பொது சுகாதார பணிப்பாளர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தார். பெரும்பாலான காய்ச்சல்கள் RSV, அடினோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் (H3N2) போன்ற வைரஸ்களால் ஏற்படுவதாக மாநில பொது சுகாதார ஆய்வகம் கண்டறிந்துள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மிக அவசியம் என்று சுப்பிரமணியன் கூறியுள்ளார்.