
நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் சிலம்பரசன், வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன், கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் பெற்றிருந்தார்.
ஆனால் சில காரணங்களால் படம் அறிவிப்பிற்கு பிறகு ட்ராப் ஆனது. அதனால் மற்ற படங்களில் நடிக்கத்தொடங்கினார் சிம்பு.
இதனை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தை அணுகிய தயாரிப்பாளர் தரப்பு, அவர் கொரோனா குமார் படத்தை நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , தடை விதித்தால் பிற நிறுவனங்களுடனான பணிகள் பாதிக்கும் எனக்குறிப்பிட்டார்.
இந்த வழக்கில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ₨ 1கோடிக்கான உத்தரவாதத்தை சிம்பு செலுத்திவிட்டார் எனவும் நீதிபதி கூறி, மத்தியஸ்தராக வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து உத்தரவு பிறப்பித்தது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
“நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க முடியாது“
— Thanthi TV (@ThanthiTV) November 10, 2023
கொரோனா குமார் படத்தை நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிப்பதற்கு நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் பட நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி சரவணன்
தடை விதித்தால் பிற… pic.twitter.com/v1UnhAMjWn