பதவியேற்பு விழாவில் பங்கேற்பு; விஜயின் புதிய அரசு குறித்து செய்தியாளர்களிடம் நடிகை த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று (மே 10) பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பங்கேற்றுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவிற்கு, நீல நிறப் பட்டுச் சேலையில் வருகை தந்த த்ரிஷா, "தமிழகத்திற்கு இது ஒரு பொன்னான நாள்" என்று செய்தியாளர்கள் குறிப்பிட்டதற்கு, "மிக்க நன்றி, இந்த மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" (Looking Forward) என்று ஒரே வார்த்தையில் உற்சாகத்துடன் பதிலளித்தார்.
கவனம் ஈர்த்த த்ரிஷா
நேரு உள்விளையாட்டரங்கில் கவனம் ஈர்த்த நடிகை த்ரிஷா
தமிழகத்தின் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கும் இந்தத் தருணத்தில், நடிகை த்ரிஷா தனது இல்லத்திலிருந்து நேரு மைதானத்திற்குப் புறப்பட்ட போதே ஊடகங்களின் கண்கள் அவர் மீது திரும்பின. ஒரு அழகான நீல நிறப் பட்டுச் சேலையில் மிக நேர்த்தியான பாரம்பரியத் தோற்றத்தில் அவர் காட்சியளித்தார். அவர் வந்தபோது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. த்ரிஷாவின் வருகை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Tamil Nadu: On a reporter's question- "big day for Tamil Nadu", actor Trisha Krishnan says, "Thank you, looking forward," as she leaves from her residence in Chennai pic.twitter.com/qdEAnfP2q8
— ANI (@ANI) May 10, 2026
ஷோபா சந்திரசேகர்
அன்னையர் தினத்தில் மகனின் வெற்றியைக் கண்டு நெகிழ்ந்த ஷோபா சந்திரசேகர்
இன்று அன்னையர் தினம் என்பது விஜயின் குடும்பத்திற்கு மற்றுமொரு சிறப்பான செய்தியாக அமைந்தது. தனது மகன் முதலமைச்சராகப் பதவியேற்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று அன்னையர் தினத்தில் எனது மகனுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.