NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல்
    திரைப்பட விநியோகம், திரையரங்குகள் உள்ளிட்ட துறைகளில், 40 வருட அனுபவம் பெற்றவர் திருப்பூர் சுப்பிரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல்

    எழுதியவர் Srinath r
    Nov 16, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோயம்புத்தூர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து, சொந்த காரணங்களுக்காக விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்பவும் என் சொந்த காரணங்களுக்காக நம் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறேன்."

    "இதுகாறும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் ஹீரோக்களுக்கு இடையே நடைபெறும் வசூல் போட்டிகளுக்கு எதிரான விமர்சனங்களை, திருப்பூர் சுப்பிரமணியம் தொடர்ந்து முன்வைத்து வந்தார்.

    மேலும், தயாரிப்பாளர்கள் சொல்லும் அளவிற்கு, திரைப்படங்கள் வசூல் செய்வதில்லை எனவும் அவர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    தொடர் சர்ச்சையில் சிக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

    சமீபத்தில் தீபாவளிக்கு சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான டைகர் 3 திரைப்படத்திற்கு, சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்படவில்லை.

    இருப்பினும், திருப்பூரில் உள்ள தனது ஸ்ரீ சக்தி சினிமாஸில் அவர், டைகர் 3 படத்தை காலை 7 மணிக்கு திரையிட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    இதுதவிர சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்களுக்கு வெற்றி படமாக அமையவில்லை என அவர் கூறியிருந்தார்.

    மேலும், லியோ திரைப்படத்தில் விநியோகஸ்தர்கள், அதிக ஷேர் தொகை கேட்டதாகவும் சுப்பிரமணியம் குற்றம்சாட்டியிருந்தார்.

    லியோ தயாரிப்பாளரான லலித்குமார், சுப்பிரமணியத்திற்கு விநியோகஸ்த உரிமை வழங்காததால் படத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை

    Mr. #TirupurSubramaniam, stepped down from Tamil Nadu Theater Owners and Multiplex Association President post due to personal workload! pic.twitter.com/7osHhlE91k

    — Rajasekar (@sekartweets) November 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திரையரங்குகள்
    கோவை
    கோயம்புத்தூர்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    தமிழ்நாடு

    வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை  தமிழக அரசு
    அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை, அபிராமி ராமநாதனிடம் சோதனை நிறைவு வருமான வரித்துறை
    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எச்சரிக்கை

    திரையரங்குகள்

    இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக போகும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படம்
    OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விதித்துள்ளது ஓடிடி
    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரைப்பட வெளியீடு
    சென்னையில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத ரோகிணி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு சென்னை

    கோவை

    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர் தமிழ்நாடு
    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  தமிழ்நாடு
    கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு? தமிழ்நாடு

    கோயம்புத்தூர்

    மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு! மெட்டா
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் தமிழ்நாடு
    சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண் சைபர் கிரைம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025