NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு வங்காள அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு வங்காள அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை! 
    தி கேரளா ஸ்டோரி

    'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு வங்காள அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை! 

    எழுதியவர் Arul Jothe
    May 18, 2023
    07:38 pm

    செய்தி முன்னோட்டம்

    அதா ஷர்மா நடித்த தி கேரளா ஸ்டோரி, மே 5 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

    சுதிப்தோ சென் இயக்கிய இந்தப் படம், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இஸ்லாமிய அரசு அல்லது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் கூறுகிறது.

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை பொதுத் திரையிட தடை விதித்து மேற்கு வங்க அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

    இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், திரைப்படம் திரையிடப்படுவதையும், திரைப்பட பார்வையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதி செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

    இந்த திரைப்படம் வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    The Kerala Story

    தடைக்கே தடை

    மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதால், படத்தை பார்ப்பதற்கு தடையேதும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மாநிலங்கள் மேல்முறையீடு செய்ய முடியாது என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறினார்.

    அதனை தொடர்ந்து, படத்தை தடை செய்த மேற்கு வங்க அரசின் உத்தரவை நிறுத்தி வைக்கலாம் என்று பெஞ்ச் முடிவெடுத்தது.

    மேற்கு வங்கத்தில் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள், படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது என்ற முடிவை எதிர்த்தும், தயாரிப்பாளர் குர்பான் அலி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரையரங்குகள்
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திரையரங்குகள்

    7000 கோடி வசூல் செய்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்பட அறிவிப்பு
    பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள் த்ரிஷா
    தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு வைரல் செய்தி
    2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி தென் இந்தியா

    திரைப்பட வெளியீடு

    கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம், 400 திரையரங்குகளில் வெளியாகப்போகிறது என அறிவிப்பு கோலிவுட்
    சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு கோலிவுட்
    இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படங்களின் பட்டியல் இதோ தமிழ் திரைப்படம்
    12 வயதிலேயே இயக்குனரான கும்பகோணம் பள்ளி மாணவி திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025