2 மாதங்கள் கழித்துதான் OTT-யில் வெளியிட வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
இன்று தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் முக்கிய முடிவாக, திரைப்படங்கள் திரைக்கு வந்து 2 மாதங்கள், அதாவது 8 வாரங்கள் கடந்த பின்னரே ஓடிடியில் வெளியிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தனர். முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு, பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. தமிழகத்தில் தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டு வருவதன் முக்கிய காரணங்கள் குறித்தும் இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. டெர்ம்ஸ் பிரச்சனை, தனி தியேட்டர்களுக்கு அதிகமான தொகைக்கு விற்கப்படுவதாகவும், மல்டிப்ளெக்ஸ் போன்ற பெரிய திரையரங்கங்களுக்கு குறைந்த தொகைக்கு விற்கப்படுவதாகவும், தயாரிப்பாளர்கள் மீது புகார் எழுப்பப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்கவில்லை என்றால், திரையரங்குகளை மூடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.