
மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன்,
பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயர போராடும் காலத்தில், பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளது.
சினிமாவில் பெண் என்றாலே இளக்கார பார்வை இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ள அந்த அறிக்கை, தற்போது வெளியுலகை விட சினிமா, பெண்களை சரிசமமாக பாதிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இக்கட்டான காலங்களில் நம்மை சுற்றியுள்ள பெண்களுக்கு தூணாகவும், உறுதுணையாகவும் நின்று, வாழ்த்த வேண்டியது அனைவரின் கடமை என குறிப்பிட்டுள்ளது.
2nd card
"மன்சூர் அலிகான் வரம்பு மீறி பேசியுள்ளார்"
சில மேடைகள், சில பேட்டிகள், சில நேரங்களில், சில மனிதர்களின் சிந்தனையை, நாவை புரட்டிப் போடும் என்பதால் நாவடக்கம் தேவை என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் நிதானத்திற்க வேண்டும் என கூறிய அந்த அறிக்கை, விடும் வார்த்தைகள் மற்றவர்களை வழியை உண்டாக்கும் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும் என்றது.
மன்சூர் அலிகான் அவ்வாறு செய்யாமல், அனைவரும் மதிக்கும் நடிகையை, வரம்பு மீறி பேசியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
3rd card
"மன்னிப்பு கேட்பது மீசையில் மண் ஒட்டும் செயல் அல்ல"
இன்றைய திரையுலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் கடமை அனைவருக்கும் உள்ளதால், நடிகர்கள் பொறுப்பறிந்து பேச வேண்டும் என அந்த அறிக்கை கூறியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவரே அவர் பேசியது தவறு எனவும், அவரின் வார்த்தைகள் தன்னை பாதித்ததாக கூறியுள்ள நிலையில், மன்சூர் அலிகான் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல் என கண்டித்துள்ளது.
மன்னிப்பு கேட்பது மீசையில் மண் ஒட்டும் செயல் அல்ல எனக் கூறியுள்ள அந்த அறிக்கை, மன்னிப்பு கேட்பது தன்னை மெருகேற்றிக் கொள்ளவும், உணர்ந்துகொள்ளவும், பெருந்தன்மையை கற்றுக் கொள்ள உதவும் எனக் கூறி உள்ளது.
மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
4th card
"அடுத்தவர்களை புண்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்"
மேலும் அந்த அறிக்கை, கலைஞர்கள் மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என என்ற நோக்கத்தோடு,
அடுத்தவர்களை புண்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க மன்சூர் அலிகானை அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் தொடர்ந்து தான் தவறு செய்யவில்லை என கூறிவருகிறார்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கைக்கு, மிகவும் மோசமான எதிர்வினையை மன்சூர் அலிகான் ஆற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
5th card
மன்சூர் அலிகான் பேச்சுக்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்
மன்சூர் அலிகான், திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்திற்கு வந்தது,"
"இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்தக் கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளவர்,
மேலும், தான் இந்த விவகாரத்தில் நடிகை திரிஷாவுடன் நிற்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
embed
திரிஷாவிற்கு ஆதரவளிக்கும் சிரஞ்சீவி
My attention was drawn to some reprehensible comments made by actor Mansoor Ali Khan about Trisha. The comments are distasteful and disgusting not just for an Artiste but for any woman or girl. These comments must be condemned in the strongest words. They reek of perversion....— Chiranjeevi Konidela (@KChiruTweets) November 21, 2023