
மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யா நடிக்க, மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மற்றுமொரு வாழ்க்கை படம் (பயோபிக்) விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது, என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா.
இந்நிலையில், சமீபத்தில், மலையாள பட நடிகர் பிரித்விராஜை சந்தித்திருந்தனர் சூர்யாவும், ஜோதிகாவும்.
'மொழி' ரீ யூனியன் என பேசப்பட்ட அவர்களின் சந்திப்பின் உண்மையான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
பிரிட்டானியா நிறுவனத்தின், தொழிலதிபர் ராஜன் பிள்ளை பயோபிக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ராஜன் பிள்ளை பியோபிக்
Buzz:
— KARTHIK DP (@dp_karthik) February 28, 2023
Actor #Suriya is all set to play the role of Britannia Biscuit's iconic Ranjan Pillai in a biopic directed by actor-director #Prithviraj. Can't wait for the official statement to drop 🍿🎥
சூர்யா
மீண்டும் ஒரு பியோபிக்கில் நடிக்க போகும் சூர்யா
சூர்யா இதற்கு முன்னதாக 'சூரரை போற்று' என்ற வாழ்க்கை படத்தில் நடித்திருந்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான அந்த படம், ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டது.
இந்த படத்திற்காக பல தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது. சூர்யாவுக்கு,ம் முதல் முறையாக நடிப்பிற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க போவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டவண்ணம் உள்ளது.
பிரித்விராஜ் ஏற்கனவே ஒருசில வெற்றி படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, 'லூசிபர்' என்ற மலையாள படத்தில், நடிகர் மோகன்லாலை இயக்கியுள்ளார். படத்தின் வெற்றியை கண்டு, இதை, தெலுங்கு மொழியில் 'காட்பாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.