கே.ஜி.எஃப் - சலார் படங்கள் மூலமாக புதிய சினிமாட்டிக் யூனிவெர்ஸை உருவாக்கும் பிரசாந்த் நீல்
இயக்குனர் பிரசாந்த் நீல், கே.ஜி.எஃப் திரைப்படத்தை இரண்டு பாகமாக எடுத்து, இந்தியாவின் தேடப்படும் இயக்குனராக மாறியுள்ளார். அவர் தற்போது, 'சலார்' என்ற பான்-இந்தியா படத்தை எடுத்துவருகிறார். இத்திரைப்படத்தில், பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். 'அதிபுருஷ்' திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு, இந்த திரைப்படத்தை பிரபாஸ் மற்றும் அவரின் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், சலார் திரைப்படத்தின் டீசர், ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு, போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அது ஒரு சினிமாட்டிக் யூனிவெர்ஸின் வெளிப்பாடு என ரசிகர்கள் டீகோட் செய்து வருகிறார்கள். காரணம், கே.ஜி.எப்-2 கிளைமாக்ஸில், யஷ் செல்லும் கப்பல் மீது அதிகாலை 5 மணிக்கு தான் தாக்குதல் நடக்கும். எனவே சலார் அதன் தொடர்ச்சிதான் என யூகிக்கிறார்கள் ரசிகர்கள்.