NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா
    அடுத்த செய்திக் கட்டுரை
    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா
    கங்குவா படப்பிடிப்பு விபத்தில், சூர்யாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் பரவி வருகிறது.

    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா

    எழுதியவர் Srinath r
    Nov 23, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில், ரோப் கேமரா அறிந்து விழுந்த விபத்தில், சூர்யா நூலிலையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

    பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னைக்கு அடுத்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு படப்பிடிப்பு நடந்து வந்த போது, ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ரோப் கேமரா சூர்யா தலை மீது விழுவதாக இருந்தது எனவும், சண்டை கலைஞர் சுப்ரீம் சுந்தர் எச்சரித்ததின் பேரில் சூர்யா நகர்ந்ததாகவும், அதனால் அவருக்கு பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.

    2nd  card

    இருவேறு விதமாக பரவும் தகவல்கள்

    நடிகர் சூர்யா மற்றும் பிற படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து, இரு வேறு விதமாக தகவல்கள் பரவி வருகிறது.

    சண்டைக் கலைஞர் சுப்ரீம் சுந்தர் எச்சரித்ததின் பெயரில் சூர்யா விலகியதால், கேமரா அவரது தலை மீது விழாமல், அவர் தோள் மீது விழுந்து அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இறுதி நாள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    விபத்து குறித்து, இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பின் போதும், இங்கு கிரேன் விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    விபத்து குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை

    A minor injury happened to #Suriya on his shoulders, yesterday at #Kanguva shooting spot due to the rope camera has been slipped off !!
    So the shooting has been cancelled today 🎬
    Get well soon #Suriya❤️ pic.twitter.com/Br2VT0ryww

    — AmuthaBharathi (@CinemaWithAB) November 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் சூர்யா
    சென்னை
    விபத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர் சூர்யா

    சூர்யா 42 : சூர்யாவிற்கு ஜோடியாகும் 'சீதா ராமம்' பட நாயகி மிருணால் கோலிவுட்
    காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள் காதலர் தினம்
    மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா? கோலிவுட்
    'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை கோலிவுட்

    சென்னை

    தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி  விமான சேவைகள்
    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை  கைது
    வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு பெங்களூர்
    கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து 3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்  போக்குவரத்து காவல்துறை

    விபத்து

    பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல்  பெங்களூர்
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம்  மருத்துவக் கல்லூரி
    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி  மும்பை
    வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து: 20 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்  பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025