காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் முதல் பாடல் 'என்னை ஆளும் சிவனே' வெளியானது
செய்தி முன்னோட்டம்
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகும் காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் முதல் பாடல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படத்தின் ப்ரீக்குவல் எனப்படும் முந்தைய காலக் கதையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது. பிரம்ம கலச என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், கடவுள் சிவபெருமானை மையப்படுத்தி இருக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான பின்னணி இசையைக் கொண்ட இந்தப் பாடல், காந்தாரா படத்திற்கே உரிய தனித்துவமான அம்சங்களுடன் கவனம் ஈர்த்துள்ளது. படம் அக்டோபர் 2 அன்று தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
An offering of chants, a celebration of devotion 🔱🔥
— Hombale Films (@hombalefilms) September 27, 2025
Listen to #Brahmakalasha, the first single from #KantaraChapter1.
Kannada – https://t.co/XAk1aJNXJ1
Hindi – https://t.co/kzcSn9rhr4
Telugu – https://t.co/442DDl5vUX
Tamil – https://t.co/6w4TrRRRsf
Malayalam –… pic.twitter.com/CMAdt0Wi7N