NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்
    தர்ஷனை சுற்றி பல சர்ச்சைகள் நீடிக்கிறது

    தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 19, 2024
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ரசிகரான ரேணுகாசுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள நடிகரின் வீட்டில் உடைகள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரவில் அவர் அணிந்திருந்த உடைகள் தர்ஷனின் வீட்டு மாடியிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

    இந்த ஆடைகள், தர்ஷனின் மனைவி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட காலணிகள் மற்றும் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில், பிரேதப் பரிசோதனையில் ரேணுகாசுவாமி கொடூரமாக தாக்கப்பட்டு, அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு காரணமாக பல அப்பட்டமான காயங்கள் ஏற்பட்டதன் விளைவாக இறந்துவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.

    மேலும், ரேணுகாசுவாமி உதைக்கப்பட்டதாகவும், விதைப்பையில் சிதைவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலாளர் தற்கொலை

    நடிகர் தர்ஷனின் பண்ணை இல்ல மேலாளர் தற்கொலை

    இதற்கிடையே நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டின் மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    தற்கொலைக்கு முன்னதாக மேலாளர் பதிவு செய்துள்ள ஒரு வீடியோ செய்தியில், மேலாளர் அவர் கடுமையான மன அழுத்தத்துடன் போராடி வருவதாக வெளிப்படுத்தினார்.

    ஆனால் இந்த கொலைக்கும் மேலாளருக்கு சம்மந்தம் இல்லையெனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலாளர் கடந்த மாத இறுதியில் மயமானதாகவும், அவரது சடலம் சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இறந்தவரின் தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோவில், ஸ்ரீதர் தனது குடும்பத்தினரை இந்த வழக்கில் எந்த விசாரணையிலும் ஈடுபடுத்த வேண்டாம் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

    மேலும் சடலத்துடன் தற்கொலை கடிதமும் கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

    மாயமான அசிஸ்டன்ட்

    பணத்தை களவாடியவர் 8 வருடங்களாக மாயம் 

    ஒன்இந்தியாவின் அறிக்கையின்படி , மல்லிகார்ஜுன் என்பவர் தர்ஷனுடன் பணிபுரிந்தார்.

    அவரது திரைப்பட அட்டவணைகள் மற்றும் பல்வேறு விவகாரங்களை நிர்வகித்தார்.

    ஆனால் அவர் 2016 முதல் காணவில்லை. கால்ஷீட் பணிகளை தாண்டி அவர் படத்தயாரிப்புகளிலும், விநியோகத்திலும் இறங்கினாராம்.

    அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்தததாக கூறப்படுகிறது.

    அவருக்கு கடன் கொடுத்தவர்களில் பிரபல நடிகர் அர்ஜுனும் ஒருவர். கிட்டத்தட்ட ₹ 1 கோடி கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அர்ஜுன் மோசடி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

    மல்லிகார்ஜுன், தர்ஷனிடம் இருந்து சுமார் ₹2 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால் அவர் மாயமான நிலையில் அவர் வாங்கிய கடனும், அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் நிலுவில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தற்கொலை
    கொலை
    கன்னட படங்கள்

    சமீபத்திய

    500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்! பூமி
    கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ் தூக்கம்
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை

    கொலை

    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை வழக்கு
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி ஏமன்

    கன்னட படங்கள்

    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படம்
    கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது நடிகர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025