NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன்
    குற்றத்தினை ஏற்றுக்கொள்வதற்கு ரூ. 5 லட்சம் தருவதாக தர்ஷன் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது

    ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 12, 2024
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது மனைவி பவித்ரா கவுடா ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமி கொலையில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தர்ஷன் தனது செல்வாக்கை எப்படி பயன்படுத்தி தனது ரசிகர் மன்ற உறுப்பினர் மூலமாக இந்த கொலையை செயல்படுத்தினார் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகளை அனுப்புவதற்காக ரேணுகாசாமி போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.

    தர்ஷனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பவித்ராவின் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டுகளால் தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த புகார்கள், பவித்ராவுக்கு ரேணுகாசாமி அனுப்பிய ஆபாச செய்திகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடத்தல் 

    ரசிகர் மன்ற உறுப்பினர் மூலமாக ரேணுகாசாமி கடத்தல்

    ராகவேந்திரா, கார்த்திக், கேசவமூர்த்தி ஆகிய 3 பேரும் ரேணுகாசாமியை கொன்று உடலை வீசியதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததால் விசாரணையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

    விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள், தர்ஷனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும், குற்றத்தினை ஏற்றுக்கொள்வதற்கும், வழக்குச் செலவுகளுக்காகவும் ரூ. 5 லட்சம் தருவதாக தர்ஷன் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    போலீஸ் வட்டாரங்களின்படி, அநாகரீகமான கருத்துக்களுக்காக ரேணுகாசாமிக்கு பதிலடி கொடுக்க பவித்ரா தர்ஷனைத் தூண்டியுள்ளார்.

    ரேணுகாசுவாமி பற்றிய தகவல்களை சேகரிக்க சித்ரதுர்காவில் உள்ள அவரது ரசிகர் மன்றத்தின் நிர்வாகியான ராகவேந்திராவை தர்ஷன் ஈடுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து ரேணுகாசாமியின் மனைவி சஹானா கூறுகையில், சம்பவத்தன்று இரவு ராகவேந்திரா தனது கணவரை தனது வீட்டின் அருகேயிருந்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    தாக்குதல்

    தர்ஷன் ரேணுகாசாமியை தாக்கியது அம்பலம்

    கடத்தப்பட்ட ரேணுகாசாமி, காமாட்சிபாளையத்தில் உள்ள கொட்டகைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    அங்கே தர்ஷன், ரேணுகாசுவாமியை பெல்ட்டால் தாக்கியுள்ளார்.

    அதற்குள் அவரது கூட்டாளிகளாக செயல்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரேணுகாசாமியை கட்டையால் அடித்துள்ளனர்.

    மேலும், அவர்கள் அவரை சுவரின் மீது வீசியதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் உடலை மழை நீர் வடிகாலில் தூக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் தர்ஷன் தூகுதீபா மற்றும் பவித்ரா கவுடா ஆகியோர் மைசூரில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பெங்களூரு அழைத்து வரப்பட்டனர்.

    தர்ஷன், பவித்ரா மற்றும் மற்ற குற்றவாளிகள் ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    நடிகர்
    கன்னட படங்கள்

    சமீபத்திய

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்
    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிப்பு; குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு மற்றும் பல எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அமைச்சரவை
    ஜூன் மாதம் முதல் அமேசான் பிரைம் வீடியோவில் Ad free சினிமா கிடையாது! அமேசான் பிரைம்

    கொலை

    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  சென்னை
    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்  பிரான்ஸ்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை வழக்கு
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்

    நடிகர்

    புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம் ஹாலிவுட்
    நடிகர் ஆதி நடித்துள்ள 'சப்தம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்படம்
    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    நடிகர் மேத்யூ பெர்ரி கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்தார்- பிரேத பரிசோதனை அறிக்கை அமெரிக்கா

    கன்னட படங்கள்

    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படம்
    கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது நடிகர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025