'கல்கி 2898 கி.பி' திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
தென்னிந்திய திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் அக்கினேனி நாகார்ஜுனா ஆகியோர் சமீபத்தில் வெளியான அறிவியல் புனைகதை திரைப்படமான கல்கி 2898 கி.பி.யை பகிரங்கமாக பாராட்டியுள்ளனர். இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் அவரது குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் ரஜினி , "கல்கியைப் பார்த்தேன். ஆஹா! என்ன ஒரு அற்புதமான காவியம்! இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். இப்படத்தின் 2ஆம் பாகத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று கூறியுள்ளார். பதிலுக்கு இயக்குனர் நாக் அஸ்வினும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
நடிகர் ரஜினியின் ட்விட்டர் பதிவு
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா பாராட்டு
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை பாராட்டியுள்ள தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் அதன் நட்சத்திர நடிகர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். " கல்கி 2898 கிபி திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் குழுவினருக்கு வாழ்த்துகள்!! நாகி நீங்கள் எங்களை வேறொரு காலத்திற்கும் வேறு இடத்திற்கும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள். புராணங்களையும் வரலாற்றையும் மிகவும் சிரமமின்றி புணைந்துள்ளீர்கள்!!" என்று நாகார்ஜூனா கூறியுள்ளார். மேலும், அவர் தனது பதிவில் நட்சத்திர நடிகர்களின் நடிப்பையும் பாராட்டி இருக்கிறார். கல்கி 2898 கிபி பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் உலகளவில் ரூ.191.5 கோடி வசூல் செய்துள்ளது,