Page Loader
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை
நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 23, 2025
02:18 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் வாங்கியதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னணியில், பிரசாத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் ஸ்ரீகாந்திடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இரத்த பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியாகுமானால், அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கைது 

ஸ்ரீகாந்த் கைதா?

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில், ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர் மற்றும் பிரதீப் குமார் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. மேலும், அவரது இரத்த பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வெளியாகவில்லை. அறிக்கைகள் வந்த பின்னரே காவல்துறை தங்களது அடுத்த நடவடிக்கையைத் தீர்மானிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திரையுலகத்திலும், சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.