Page Loader
அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா
அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா

அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா

எழுதியவர் Venkatalakshmi V
Jan 19, 2024
10:32 am

செய்தி முன்னோட்டம்

நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்னப்பூரணி'. இப்படம் விமர்சனரீதியாக நல்ல பெயரை பெற்று வந்த நிலையில், டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், மதஉணர்வை புண்படுத்துவது போல உள்ளதென நயன்தாரா மீதும், படக்குழுவினர் மீதும் வழக்கு தொடர்ந்தார். உடனே, இப்படத்தை, ஓடிடியில் வெளியிட்டிருந்த நெட்ஃபிலிக்ஸ், படத்தை நீக்கியது. சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டபிறகு மீண்டும் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ளார் நயன்தாரா. அதில்,"அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக்கூறியுள்ளார்.

Instagram அஞ்சல்

மனம் திறந்த நயன்தாரா