மீண்டும் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் விஜய் ஆண்டனி; வெளியான அறிவிப்பு
கடந்த மாதம், சென்னை YMCA மைதானத்தில், முதல்முறையாக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அந்த நிகழ்ச்சி யாரும் எதிர்பார்ககாத வகையில் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. அந்த வெற்றியை தானே எதிர்பார்க்கவில்லை என ஒரு பேட்டியின்போது தெரிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. ரசிகர்களின் அந்த வரவேற்பும், ஆதரவும் தன்னை மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தை தருவதாக அப்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை, தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில், 2 தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார் அவர். அதன்படி, வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கோவையிலும், டிசம்பர் 16-ஆம் தேதி பெங்களூருவிலும், டிசம்பர் 31-ம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளது.