NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் விமர்சிப்பது குறித்து மணிரத்னம் 'நச்' பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் விமர்சிப்பது குறித்து மணிரத்னம் 'நச்' பதில்
    பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் பணிகளின் போது, நிருபர்களை சந்தித்த படக்குழு

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் விமர்சிப்பது குறித்து மணிரத்னம் 'நச்' பதில்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 19, 2023
    01:09 pm

    செய்தி முன்னோட்டம்

    பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. வரும் ஏப்ரல் 28 அன்று, திரையரங்குகளில் வெளியாகப்போகிறது.

    இதனிடையே படக்குழுவினர் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளனர்.

    சென்ற வாரம் துவங்கிய ப்ரோமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னையில் படக்குழு-நிருபர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அப்போது, படத்தை குறித்து, படக்குழுவின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் கேட்கப்பட்டது.

    அப்போது நிருபர் ஒருவர், தமிழ் படங்கள் குறிப்பாக, பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் வைப்பது குறித்தும், பாகுபலி திரைப்படத்தோடு ஒப்பிட்டு பேசுவது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

    இதற்கு மணிரத்னம் பெருந்தன்மையாக பதிலளித்த விதம் பலரின் பாராட்டை பெற்றாலும், நிருபரின் அந்த கேள்வி பலத்த எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

    பொன்னியின் செல்வன்

    "கருத்து கூற அவர்களுக்கு உரிமை உண்டு"

    நிருபரின் கேள்விக்கு, மணிரத்னம், "ஒவ்வொருவருக்கும், ஒரு கருத்தும், ரசனையும் உண்டு. அவர்களைக் கேள்வி கேட்க கூடாது என கூறமுடியாது. எங்கள் (படத்தை) திட்டத்தைப் பற்றி நாங்கள் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருக்கிறோம், அதுதான் முக்கியம்" என கூறினார்.

    இதேபோல, வேறு ஒரு சமயத்திலும், மணிரத்னத்திடம், பாகுபலி படத்தை பற்றியும், ராஜமௌலி பற்றியும் கேள்வி கேட்டபோது, "ஒரு படத்தை, இரு பாகங்களாக பிரித்து எடுத்தாலும், ரசிகர்களின் சுவாரஸ்யத்தை தக்க வைக்கமுடியும் என நிரூபித்து காட்டியவர் ராஜமௌலி. அவரின் பாகுபலி தந்த நம்பிக்கையில் தான், நான் தைரியமாக பொன்னியின் செல்வனை எடுக்க முடிந்தது" என கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் திரைப்படங்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கோலிவுட்

    நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு!  தனுஷ்
    முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ரஜினிகாந்த்
    21 Years of Gemini: 'ஓ போடு' நாஸ்டால்ஜியா, விக்ரமின் ஸ்பெஷல் பதிவு விக்ரம்
    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை

    தமிழ் திரைப்படங்கள்

    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா? சிவகார்த்திகேயன்
    சூர்யா 42: படத்தின் ஹிந்தி உரிமம் ரூ.100 கோடிக்கு விற்பனை தமிழ் திரைப்படம்
    அப்பா-மகன் என இருவருடனும் ஜோடியாக நடித்த பிரபல நடிகைகள் தமிழ் திரைப்படம்
    கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் விருதுகளை வென்ற RRR தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025