
அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை இசை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இசையமைப்பாளர் அனிருத் நடத்தவிருந்த 'Hukum' இசை நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நீதிபதி தனது உத்தரவில், காவல்துறை விதித்த நிபந்தனைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு, சமூக, போக்குவரத்து அல்லது சத்தம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த உத்தரவின் மூலம், அனிருத் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இசை நிகழ்ச்சி எந்த இடத்தில், எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு
MLA தொடர்ந்த வழக்கு, அவசர வழக்காக விசாரணை
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்(ECR) கூவத்தூர் அருகே உள்ள சீகினம்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெறவிருந்த அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு எதிரான அவசர ரிட் மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி MLA 'பனையூர்' பாபு (எ) எம். பாபு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். எம்எல்ஏவின் வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி, இசை நிகழ்ச்சியின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்த இடத்தில் தற்காலிக கழிப்பறைகள் அல்லது சுகாதார வசதிகள், குடிநீர் நிலையங்கள் அல்லது மருத்துவ உதவி மையங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.