Page Loader
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் 

எழுதியவர் Sindhuja SM
Jan 06, 2024
05:56 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். 1966ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஏஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப் குமார் ஆகும். அவர் தனது 23வது வயதில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவரது தந்தை மலையாள திரையுலகில் இசையமைப்பராக இருந்தவர ஆவார். ரகுமானின் 9-வது வயதில் அவர் தந்தை மரணமடைந்தார். தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு பல வருடங்களாக தற்கொலை எண்ணங்களுடன் தான் போராடியதாக ஏ.ஆர்.ரகுமான் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

ட்ஜ்வ்,

முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் 

அதற்கிடையில், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோருக்கு உதவியாளராகவும் ஏஆர் ரகுமான் இருந்திருக்கிறார். அதன் பின், 1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன்பின் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், சீனம் என பல மொழிகளில் இசையமைத்து உலகளவில் புகழ் பெற்றார். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் மூலம் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கார் விருத்தை வென்றார். மொத்தமாக, 2 ஆஸ்கார் விருதுகள், 6 தேசிய விருதுகள், 11 IIFA விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், பாப்தா, கிராமி விருது என அவர் பெற்ற விருதுகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகிறது.