NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / எம்புரான் படத்தின் இயக்குனர் பிரித்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது வருமான வரித்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்புரான் படத்தின் இயக்குனர் பிரித்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது வருமான வரித்துறை
    எம்புரான் இயக்குனர் பிரித்விராஜுக்கு வருமான வரி நோட்டீஸ்

    எம்புரான் படத்தின் இயக்குனர் பிரித்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது வருமான வரித்துறை

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 05, 2025
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    எம்புரான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான நிதி ஆய்வு நடந்து வரும் நிலையில், படத்தின் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    முன்னதாக, எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளுக்காக எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, திரைப்பட தயாரிப்பாளர்கள் சில பகுதிகளை நீக்கினர்.

    மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் சிட் ஃபண்ட்ஸுடன் தொடர்புடைய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலனின் கோகுலம் சிட் ஃபண்ட்ஸ் தொடர்பான முறைகேடுகள் குறித்து 2017 ஆம் ஆண்டில் 76 இடங்களில் வருமான வரி சோதனைகளை எதிர்கொண்டது.

    வரி ஏய்ப்பு

    வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

    இந்த சோதனைகளைத் தொடர்ந்து, ஐந்து வருட காலத்தில் நிறுவனம் ₹1,107 கோடி வருமான வரியை ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திலும், நீலாங்கரையில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் கோகுலம் கோபாலனின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    அதேநேரத்தில், நிறுவனத்துடன் தொடர்புடைய சென்னையில் ஐந்து கூடுதல் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    கோல்ட், ஜன கண மன மற்றும் கடுவ போன்ற படங்களையும் தயாரித்த பிரித்விராஜ், இந்த முயற்சிகள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்திற்காக இப்போது கண்காணிப்பில் உள்ளார்.

    இந்நிலையில், எம்புரான் மற்றும் அதன் தயாரிப்பாளர்களுடன் தொடர்புடைய பரந்த நிதி விசாரணையின் ஒரு பகுதியாக, பிரித்விராஜ் சுகுமாரனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரித்விராஜ்
    சினிமா
    மலையாள திரையுலகம்
    வருமான வரித்துறை

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும் 'L2: எம்பூரான்' ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது மலையாள படம்
    'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு பிரபாஸ்
    இரண்டு நாளில் ரூ.295 கோடி: உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'சலார்' பிரபாஸ்
    நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் எப்போது?  ஓடிடி

    சினிமா

    நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது ஏன்? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை நடிகர் அஜித்
    பத்ம பூஷன் விருது பெற்ற பரதநாட்டிய நாயகி ஷோபனா; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் விருது
    பத்மஸ்ரீ விருது பெற்ற நடன கலைஞர் மம்தா சங்கருக்கு இப்படியொரு பின்னணியா? முழு விபரம் பத்மஸ்ரீ விருது
    சிவகார்த்திகேயனின் பராசக்தி vs விஜய் ஆண்டனியின் பராஷக்தி; சர்ச்சையைக் கிளப்பிய டைட்டில் போஸ்டர்கள் சிவகார்த்திகேயன்

    மலையாள திரையுலகம்

    #நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள் நடிகர்
    மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு  மலையாள படம்
    "எந்த வடிவத்திலாவது சினிமாவை தொடருங்கள்" :அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு, சுதா கொங்கரா கோரிக்கை  சினிமா
    தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் நெட்ஃபிலிக்ஸ்

    வருமான வரித்துறை

    கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை செந்தில் பாலாஜி
    வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித்துறை வெளியிட்ட AIS செயலியைப் பற்றித் தெரியுமா? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025