NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா? 
    நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா?

    நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா? 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 06, 2023
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    சமூக வலைத்தளங்கள், பல நல்ல விஷயங்களை பகிரவும், ஒருவரை ஒருவர் இணைக்கவும் பயன்படும்.

    ஆனால், சில சந்தர்ப்பங்களில், அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப பயன்படுகிறது.

    வைரலாகவேண்டும் என்ற நோக்கத்தோடு சில விஷமிகள் அவ்வப்போது பிரபலங்களை குறி வைத்து வதந்திகளை பரப்புவதுண்டு.

    சில மாதங்களுக்கு முன்னர், 'சாமி' படத்தின் வில்லன் நடிகர், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணமடைந்தார் என செய்தி பரவியது.

    உடனே அந்த ஊரின் காவல்துறையினர், அவர் வீடு இருந்த தெருவிற்கு தடுப்புகளை போட்டு, வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து விட்டு விசாரித்த பின்னர் தான் தெரிந்தது இது வெறும் வதந்தி என.

    இந்த முறை, தவறான மரண வதந்திகளுக்கு இலக்கானவர், ரம்யா என்று பிரபலமாக அறியப்படும் நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா.

    card 2

    திவ்யா ஸ்பந்தனா பற்றி பொய்யான செய்திகள் பரவ ஆரம்பித்தது எப்படி?

    ஜான்சன் PRO என அடையாளம் காணப்பட்ட ஒரு பயனர் X இல் ஸ்பந்தனா மாரடைப்பால் பரிதாபமாக இறந்துவிட்டார் என்று ஒரு செய்தியை வெளியிட்டது தான் இந்த வதந்திகளின் தொடக்கப்புள்ளி.

    இந்த தகவல் விரைவாக பரவ தொடங்க, சில தமிழ் ஊடகங்களும் இதை சரிபார்க்காமல் பரப்ப தொடங்கியது.

    "பெயரில் என்ன இருக்கிறது? நிறைய, வெளிப்படையாகத் தெரிகிறது" என்று புதன்கிழமை அதிகாலையில் ஸ்பந்தனா, பாரத்-இந்தியா பெயர் சர்ச்சை குறித்து ஒரு ட்வீட்டைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    card 3

    பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம், ஸ்பந்தனாவின் நலனை உறுதிப்படுத்தினார்

    X இல் (முன்னாள் ட்விட்டர்) செய்தி வைரலான பிறகு, பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் சமூக ஊடகங்களில் நிலைமையை தெளிவுபடுத்தினார்.

    "நான் ஸ்பந்தனாவிடம் பேசினேன். அவள் நலமாக இருக்கிறாள். நாளை பராகுவே சென்றுவிட்டு, பின்னர் பெங்களூர் வருகிறார்" என்று குறிப்பிட்டார்.

    அவர் சரியான நேரத்தில் தெளிவுபடுத்தியதால், இந்த பொய்யான செய்தி மேலும் பரவுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் ரம்யாவின் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

    அவரின் ட்வீட் இதோ:

    card 4

    பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், பொய் செய்திகளை பரப்புபவர்களை கடுமையாக சாடியுள்ளார்

    பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரனும் எக்ஸ் தளத்திற்கு சென்று, போலியான செய்திகள் மற்றும் அவற்றை பரப்புவதற்கு காரணமானவர்களைக் கடுமையாக சாடினார்.

    இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். "ஸ்பந்தனாவிடம் பேசினேன்.

    அவள் ஜெனீவாவில் இருக்கிறாள், அழைப்புகள் வரும் வரை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். பொறுப்பற்ற நபர் யாராக இருந்தாலும், இதை ட்வீட் செய்தவர் மற்றும் அதை செய்தியாக வெளியிட்ட செய்தி நிறுவனங்களும் வெட்கப்பட வேண்டும்."

    ட்விட்டர் அஞ்சல்

    சித்ரா சுப்ரமணியத்தின் பதிவு 

    I just spoke to @divyaspandana She’s well. En route to Prague tomorrow and the to Bangalore.

    — Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    தன்யா ராஜேந்திரனின் பதிவு

    It was really the strangest conversation, kept calling @divyaspandana and she didnt pick first few times and naturally I was panicking. Finally she did and I had to say-I am glad you are alive, She is like who the hell is saying I died! #DivyaSpandana

    — Dhanya Rajendran (@dhanyarajendran) September 6, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    தன்யா ராஜேந்திரனின் பதிவு

    Just spoke to @divyaspandana. She is in Geneva, was sleeping peacefully till calls came in. Whoever the irresponsible person was who tweeted this and the news organisations that put it out as news flash, shame on you. #DivyaSpandana

    — Dhanya Rajendran (@dhanyarajendran) September 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகைகள்
    வைரல் செய்தி
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    நடிகைகள்

    நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி! கோலிவுட்
    அனுஷ்கா ஷெட்டி படத்திற்காக "என்னடா நடக்குது" என்ற பாடலை பாடியுள்ள தனுஷ் தமிழ் திரைப்படம்
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகை வரலட்சுமி செய்த வினோதமான வேண்டுதல்!  சென்னை சூப்பர் கிங்ஸ்
    சினிமா கனவு கைகூடவில்லையெனில் இதை தான் செய்திருப்பேன்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்!  ரகுல் ப்ரீத் சிங்

    வைரல் செய்தி

    அம்புட்டும் நடிப்பு..! யாஷிகாவுடன் காதல் செய்திக்கு ரிச்சர்ட் ரிஷியின் விளக்கம்  கோலிவுட்
    வீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள்  இந்தியா
    14 வயதில் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த, இளம் பணியாளர் எலான் மஸ்க்
    ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்  டெல்லி

    வைரலான ட்வீட்

    அடுத்து வாரம் திருமணம்..கார் விபத்தில் சிக்கிய 'எங்கேயும் எப்போதும்' நடிகர்  கோலிவுட்
    மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்ற வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்! வைரல் செய்தி
    கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர்  ரயில்கள்
    ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு  திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025