NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால் 
    தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால்

    தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால் 

    எழுதியவர் Nivetha P
    Oct 10, 2023
    02:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் அண்மையில் நடித்து வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.

    கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அவரது படம் தோல்வியினை கண்ட நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.

    விஷாலின் படங்களுள் ரூ.100 கோடி வசூல் பெற்ற முதல் திரைப்படம் என்னும் பெருமையினையும் இப்படம் பெற்றுள்ளது.

    இதனிடையே இந்த வெற்றியினை கொண்டாடிய விஷால், இப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

    இந்நிலையில் தற்போது விஷால் தனது 34வது படத்தினை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவான 'தாமிரபரணி', 'பூஜை' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

    விஷால் 

    தேவி அறக்கட்டளை மூலம் உதவி 

    இதனால் மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரசக்கனாபுரம் என்னும் கிராமத்தில் நடந்தது.

    அப்போது படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள விஷால் அங்கு சென்றிருந்த நிலையில், தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படி அக்கிராம மக்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது.

    அக்கோரிக்கையினை ஏற்ற விஷால், அக்கிராம ஊராட்சி மன்றத்தலைவரான ராமகிருஷ்ணன் என்பவரை அழைத்து பேசியுள்ளார்.

    அப்போது தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவி செய்வதாக கூறியுள்ளார்.

    அவர் உறுதியளித்ததன் படி, தற்போது அக்கிராமத்தில் போர் போட்டு, 2 சின்டெக்ஸ் டேங்க் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

    தாங்கள் கேட்டவுடன் உடனடியாக தங்களது நெடுங்கால தண்ணீர் பஞ்சத்தினை போக்கிய விஷாலுக்கு அக்கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    வீடியோ பதிவு 

    #தாமிரபரணி #பூஜை ஆகிய ஹிட் படங்களை தொடர்ந்து #ஹரி இயக்கத்தில் #விஷால் நடித்து வரும் #Vishal34 என்ற படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடந்து வருகிறது. M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக pic.twitter.com/3FnLmfvwTt

    — Actor Kayal Devaraj (@kayaldevaraj) October 9, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஷால்
    தமிழ் சினிமா
    குடிநீர்
    தூத்துக்குடி

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    விஷால்

    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம் இசையமைப்பாளர்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  வைரலான ட்வீட்
    'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ் பாடல் வெளியீடு
    மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா

    தமிழ் சினிமா

    'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு பிறந்தநாள்
    நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்  பிறந்தநாள்
    ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா? கோலிவுட்
    சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட் கோலிவுட்

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு மதுரை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் மாவட்ட செய்திகள்
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025