'அவதார் 3' படத்தை பார்த்த முதல் இந்தியர் ராஜமௌலியா?
செய்தி முன்னோட்டம்
புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமீபத்தில் 'Avatar: Fire and Ash.' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை virtual முறையில் சந்தித்தார். அவர்களின் உரையாடலின் போது,"1.45 பில்லியன் இந்தியர்களில் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தைப் பார்த்த முதல் நபராக, அல்லது ஒரே நபராக என்னை நீங்கள் உருவாக்கியதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார். "ஃபயர் அண்ட் ஆஷ் படத்தைப் பார்ப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சிக்கலான காட்சிகள், காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்கியதற்கு உங்களுக்கு வணக்கம். நான் தியேட்டரில் ஒரு குழந்தையைப் போல இருந்தேன்." Avatar: Fire and Ash படம் டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
வாரணாசி
வாரணாசி படம் குறித்தும் சிலாகித்த கேமரூன்
இந்த உரையாடலின் போது, ஜேம்ஸ் கேமரூனும், ராஜமௌலியின் வரவிருக்கும் 'வாரணாசி' படம் பற்றி பேசினார். அப்போது இந்த படத்தில் தானும் பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும் ராஜமௌலியின் படைப்பில் ஒன்றிரண்டு ஷாட்களை தான் இரண்டாவது இயக்குனராக படமெடுக்கவும் அவர் விருப்பம் தெரிவித்தார். தொடர்ந்து இந்த படத்தின் புலிகளுடன் கூடிய காட்சிகள் இருப்பதை தான் அறிந்ததாகவும், அப்போது தன்னை படப்பிடிப்பு தளத்திற்கு தன்னை அழைக்குமாறும் அவர் கோரினர். கேமரூனின் உரையாடலில் சிலிர்த்த ராஜமௌலி அவரை கட்டாயம் ஹைதராபாதில் நடைபெறும் படப்பிடிப்பு தளத்திற்கு அழைப்பதாக தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
JamesCameron: I think you've been shooting for #Varanasi, Your new film🎬#SSRajamouli: We've been shooting for a Year and 8-9 months to finish it⌛#JamesCameron: Call Me. When you're shooting something fun. With tigers😁🐯 pic.twitter.com/xC63kiAeh3
— AmuthaBharathi (@CinemaWithAB) December 17, 2025