டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை குறித்து ராஷ்மிகா மந்தனா கருத்து
செய்தி முன்னோட்டம்
நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டுக்குள் செல்வது போன்ற டீப்ஃபேக் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது பற்றி ரஷ்மிகா தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் இந்திய பெண்ணின் வீடியோவில், ராஷ்மிகா மந்தனாவின் முகம் டீப்ஃபேக் மூலம் இணைக்கப்பட்ட வீடியோ வைரலானது.
இதற்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் முதல் பலரும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஷ்மிகா, "இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் நான் ஆன்லைனில் பரப்பப்படும் டீப்ஃபேக்கைக் வீடியோவைப் பற்றி பேச வேண்டும்."
"இதுபோன்ற ஒன்று எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது"
2nd card
டீப்ஃபேக் வீடியோ குறித்து ராஷ்மிகா ட்விட்
மேலும் அவர், "இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும், எனது பாதுகாப்பு மற்றும் ஆதரவு அமைப்பாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."
"ஆனால் நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்திருந்தால், இதை எப்படி சமாளிப்பேன் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது".
"இதுபோன்ற அடையாளத் திருட்டால் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதை ஒரு சமூகமாக, அவசரமாகவும் நாம் கவனிக்க வேண்டும்" என தான் வெளியிட்டு இருந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
டீப்ஃபேக் சர்ச்சை குறித்து மௌனம் கலைத்த ராஷ்மிகா
I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.
— Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023
Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…