
நடிகை குஷ்பு, கடுமையான ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வரும் காய்ச்சலுக்கு யாரும் விதிவிலக்கில்லை என்பது உறுதியாகி உள்ளது.
நடிகை குஷ்பூ, தற்போது, கடுமையான ஃப்ளு பாதிப்புக்கு ஆளானதாகவும், அதனை தொடர்ந்து, தற்போது ஹைதராபாதில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாகவும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமானது. அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். உடல் மெதுவாகச் சோர்வடையும் போது, அது காய்ச்சலுக்கான அறிகுறிகள். அதனை புறக்கணிக்காதீர்கள். தற்போது படிப்படியாக குணமாகி வருகிறேன். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மருத்துவமனையில் குஷ்பூ
Like I was saying, the flu is bad. It has taken its toll on me. Admitted for very high fever, killing body ache and weakness. Fortunately, in good hands at @Apollohyderabad
— KhushbuSundar (@khushsundar) April 7, 2023
Pls do not ignore signs when your body says slow down. On the road to recovery, but long way to go. pic.twitter.com/FtwnS74pko
குஷ்பூ
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் குஷ்பூ
நடிகை குஷ்பு சமீப காலமாக தன்னுடைய உடல் நலத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
கொரோனா லாக்டௌனின் பொழுது, தீவிர உடற்பயிற்சியில் இறங்கினார். அவருடைய குடும்பத்தினருடைய உந்துதல் தான் காரணம் எனவும், 'அண்ணாத்தே' படத்தின் போதுதான், தன்னுடைய எடையின் மீது கவலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போது கூட, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இப்படி சுறுசுறுப்பாக சுற்றிக்கொண்டிருந்த தங்களுடைய பேவரைட் ஹீரோயின், தற்போது மருத்துவமனையில் இருப்பதை பார்த்து, குஷ்புவின் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளார்.
'Take Care', 'Get Well soon' என பலரும், குஷ்புவின் ட்வீட்டிற்கு பதில் தெரிவித்து வருகின்றனர்.