Page Loader
தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர்
வாக்குச்சாவடி மையத்தில் ஜூனியர் என்டிஆர்.

தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர்

எழுதியவர் Srinath r
Nov 30, 2023
10:48 am

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர். ஜூனியர் என்டிஆர் அவரது மனைவி லட்சுமி பிரணதி, அம்மா ஷாலினி நந்தமுரி ஆகியோருடன் வாக்களிக்க வந்த நிலையில், அல்லு அர்ஜுன் தனியாக ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். மெகாஸ்டார் சிரஞ்சீவியும், அவரது குடும்பத்துடன் வாக்களிக்க வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற பெறும் நிலையில், தெலுங்கானாவிற்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநிலத்தில் பதிவான வாக்குகளும், டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தேர்தலில் வாக்களித்த அல்லு அர்ஜுன்

ட்விட்டர் அஞ்சல்

ஜூனியர் என்டிஆர் குடும்பத்துடன் வாக்களிக்க வந்த காட்சிகள்

ட்விட்டர் அஞ்சல்

அனைவரையும் வாக்களித்த வலியுறுத்தும் சிரஞ்சீவி

ட்விட்டர் அஞ்சல்

தேர்தலில் வாக்களித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  பிரக்யான் ஓஜா