தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி விருந்து வைத்த விஷால்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரியுடன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் நிலையில், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்மூருமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஷாலின் சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் திருச்சியில் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு படத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு, நடிகர் விஷால் சமபந்தி விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். இவ்விருந்தில், ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் உணவருந்தினர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.