
"குடும்ப பிரச்னையால் தவறு செய்தேன்" என நடிகர் ஸ்ரீகாந்த் போலீஸ் விசாரணையில் கண்ணீருடன் வாக்குமூலம்
செய்தி முன்னோட்டம்
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோகைன் (Cocaine) பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் போலீசாரிடம் கண்ணீர் உடன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தின்படி,"திருப்பதியை சேர்ந்த நான், சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. திருமணத்திலும் பிரச்சனைகள் வந்தது. எங்களது மனவாழ்க்கை சீராக நடைபெறவில்லை. வந்தனாவுடன் பிரிந்த நிலையில், மகன் என்னுடன், மகள் அவருடன் வாழ்கிறார்கள்." எனத்தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம்
மனைவியிடம் தகராறு, பிரிந்து வாழும் ஸ்ரீகாந்த்
"எனது திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வணிக வெற்றி பெறவில்லை. அதனால், ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தன. திருமணத்திற்கு முன், ஒரு நடிகையுடன் நெருங்கிய உறவில் இருந்தேன்." "ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் வந்தனா என்பவரை சந்தித்தேன். பல சர்ச்சைகளுக்குப் பிறகு, 2007ல் அவருடன் காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்குள் மதிப்பும் புரிதலும் குறைந்ததால், வாழ்க்கை பாதையில் பிரிந்தோம். மகள் அவருடனும், மகன் என்னுடன் வாழ்கிறார்." "இந்த மன அழுத்தங்களின் நேரத்தில், நடிகர்கள், பிரபலங்கள் கலந்து கொள்கின்ற இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டபோது கோகைன் பழக்கம் ஏற்பட்டது. அது ஒரு பொழுதுபோக்காக இல்லாமல், அடிமைத்தனமாக மாறியது." என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
பழக்கம்
நடிகை மூலம் அறிமுகம் ஆன தயாரிப்பாளர் பிரசாத்
"படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தபோது தான், நடிகை ஒருவர் வாயிலாக, அதிமுகவைச் சேர்ந்த பிரசாத் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது". தன்னுடைய தீங்கிரை என்ற படத்தை அவர் தயாரிப்பதாகவும், அவர், கோகைன் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார். அவரிடம், 5 லட்சம் ரூபாய் வரைக்கும், கோகைன் வாங்கி பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்த் தெரிவித்தார். படத்தில் நடிப்பதற்காக, 10 லட்சம் ரூபாய் பிரசாத் தர வேண்டி இருந்தததாகவும், இந்த தொகைக்கு பதிலாக, கோகைன் தருவதாக அவர் கூறியதாகவும் கூறிஉள்ளார். கடைசியாக அவரிடம், 250 கிராம் வாங்கியதாகவும், "குடும்ப பிரச்னை காரணமாக போதைக்கு அடிமையாகிவிட்டேன். நான் கோகைன் வாங்கி மற்ற நடிகர், நடிகையருக்கோ, வேறு நபர்களுக்கோ விற்பனை செய்யவில்லை" எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.