LOADING...
ஜி.வி.பிரகாஷ் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி தருகிறார் அப்பாஸ்!
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி அளிக்கிறார் அப்பாஸ்

ஜி.வி.பிரகாஷ் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி தருகிறார் அப்பாஸ்!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2025
10:54 am

செய்தி முன்னோட்டம்

90-களில் 'காதல் தேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, 'விஐபி', 'பூச்சூடவா', 'ஜாலி', 'ஆசை தம்பி' போன்ற பல பிரபல படங்களில் நடித்த நடிகர் அப்பாஸ், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி அளிக்கிறார். சினிமாவை விட்டு ஒதுங்கி நியூசிலாந்தில் வசித்து வந்த அவர், தற்போது ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார். இந்தப் படத்தை பியாண்டு பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். படத்தை மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். கதாநாயகியாக கவுரி பிரியா நடித்துவர, இசை அமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் கவனிக்கிறார்.

விவரங்கள்

பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

படத்தின் பற்றிய தகவல்களை இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் பகிர்ந்தபோது, "இது நகைச்சுவை மொத்தமாக கலந்த குடும்பப் படம். இப்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இதுவரை முயற்சிக்காத ஒரு வேடத்தில் நடித்து வருகிறார். அப்பாஸ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது. ஆனால் அவர் மீண்டும் திரையில் வருவது ரசிகர்களுக்கு நல்ல செய்தி. இது முழுமையான பொழுதுபோக்கு படமாக அமையும்," எனத் தெரிவித்தார். அப்பாஸ் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இது நிச்சயமாக மகிழ்ச்சியான, ஆச்சரியமான தருணமாக இருக்கும் எனவும் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.