NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
    மேல்முறையீடு வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்

    செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2023
    02:20 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தரப்பட்ட செக், வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிய விவகாரத்தில், இயக்குனர் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த மோசடி வழக்கில் மேல்முறையீடு மனுவின் விசாரணையில், லிங்குசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாதங்கள் சிறை தண்டனை உறுதி செய்தது முதன்மை அமர்வு நீதிமன்றம்.

    இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்லப்போவதாக லிங்குசாமி அறிவித்திருந்தார்.

    தற்போது அந்த மனுவின் விசாரணையின் இறுதியில், லிங்குசாமிக்கு அவரது சகோதரருக்கும் விதிக்கப்பட்டிருந்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, காசோலை தொகையில் 20%, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு 

    #BREAKING || காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

    * லிங்குசாமி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    * காசோலை தொகையில் 20% சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும்… pic.twitter.com/DTfaM8pJXW

    — Thanthi TV (@ThanthiTV) April 24, 2023

    card 2

    செக் மோசடி வழக்கின் பின்னணி என்ன?

    லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

    பல வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம், அதன்பிறகு, சில தோல்வி படங்களை தந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது.

    இதற்காக, கடந்த 2014ஆம் ஆண்டு, பிவிபி கேப்பிட்டல்ஸிடம்,1.3 கோடி ரூபாய் கடனாக வாங்கினார் லிங்குசாமி.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் கடனை அடைக்காததால், பிவிபி நிறுவனம், லிங்குசாமியின் மீது வழக்கு தொடர்ந்தது.

    அதன்பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், லிங்குசாமி, செக் கொடுத்துள்ளார்.

    ஆனால், அந்த செக் பௌன்ஸ் ஆகி விட்டது.

    இதனால், லிங்குசாமி மீது செக் மோசடி என வழக்கு தொடர்ந்தது PVP கேபிட்டல்ஸ்.

    அந்த விசாரணையின் இறுதியில் தான், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    கோலிவுட்

    பிரபல வில்லன் நடிகர் 'நிழல்கள்' ரவியின் பிறந்தநாள் 67வது இன்று  பிறந்தநாள்
    'சீயான்' விக்ரம் பிறந்தநாள் இன்று: அவரின் பிரமிப்பூட்டும் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் விக்ரம்
    நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாள் இன்று: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்க பிறந்தநாள்
    நான் அழகு என்று உறுதியாக நம்ப பல ஆண்டுகள் ஆனது - பிரபல பாலிவுட் நடிகை வைரல் செய்தி

    சென்னை உயர் நீதிமன்றம்

    18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு தமிழ்நாடு
    இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் இந்தியா
    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட செய்திகள்
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025