NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி
    பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா?

    என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி

    எழுதியவர் Arul Jothe
    Jun 02, 2023
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய சினிமாவில் 2015-ல் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகியது.

    படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 600 கோடிக்கு மேலும், இரண்டாம் பாகம் ரூ. 500 கோடிக்கு மேலும் வசூலித்தது.

    இந்த படத்திற்காக 400 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட செய்தியை தற்போது ஒரு பேட்டியில் ராணா டகுபதி வெளிப்படுத்தினார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, இத்தகவலை கூறினார்.

    திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்கள் திரைப்படங்களுக்கு பணம் திரட்டுவது பற்றிய பேச்சு எழுகையில் பாகுபலி படத்திற்காக வாங்கப்பட்ட கடன் குறித்து பேசினார்.

    Bagubali movie

    எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைபடத்திற்கு வாங்கிய கடன் 

    அப்போது, " மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படமெடுப்பதற்கெல்லாம் பணம் முதலீடு செய்ய வீடு அல்லது அவர்களது சொத்தை வங்கியில் அடமானமாக வைத்தனர். அதிக வட்டிக்கு கடன்களும் வாங்கினர்" என்றார்.

    மேலும், பாகுபலி படத்திற்காக 300-400 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது, அதற்காக சுமார் 24-28 சதவீத வட்டியும் செலுத்தினோம்" என்றார்.

    பாகுபலி-1 வெளியான பிறகு, தயாரிப்பாளர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக, 24 சதவீத வட்டியில், 180 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகவும் ராணா கூறினார்.

    "முதல் பாகத்தில் வசூலான பணத்தை விட இரு மடங்கு செலவு செய்தோம். அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் எடுத்தோம். படம் ஹிட் ஆகவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று தெரியாது" என அவர் மேலும் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்
    கோலிவுட்
    தெலுங்கு திரையுலகம்

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    தமிழ் திரைப்படம்

    7 அதிசயங்களை கண் முன்னே காட்டிய ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது! கோலிவுட்
    செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி-2 - படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்!  கோலிவுட்
    ஐஸ் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட ஏலியன் பொம்மை; 4,500 VFX காட்சிகள்: மிரள வைக்கும் அயலான் படத்தின் தகவல்கள் சிவகார்த்திகேயன்
    அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிந்த 'லெஜெண்ட்' பட ஹீரோயின் கோலிவுட்

    கோலிவுட்

    மீண்டும் மாதவனுடன் இணையும் ஜோதிகா, ஆனால் தமிழ் படத்தில் அல்ல! பாலிவுட்
    மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைய போகிறார்களா விக்ரமும், ஐஸ்வர்யா ராயும்? பாலிவுட்
    அன்னையர் தினத்தன்று குட் நியூஸ் சொன்ன நடிகை அபிராமி  தமிழ் திரைப்படங்கள்
    உடல் நலம் தேறி வருவதாக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ட்வீட் வைரலான ட்வீட்

    தெலுங்கு திரையுலகம்

    விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு! அதிர்ச்சியில் ரசிகர்கள்  தெலுங்கு படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025