NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம்
    பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம்

    பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 22, 2023
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    1900-களில் நிறுவப்பட்டு இன்று பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வளர்ந்து நிற்கும் சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட முருகப்பா குழுமத்தில், கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.

    உண்மையில் அது பிரச்சினையாகியிருக்க வேண்டிய விஷயம் அல்ல, மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய வணிகக் குழுமம், பாலின வேறுபாடுகளைப் பார்ப்பதாக சர்ச்சையில் சிக்கியது.

    முருகப்பா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட்ஸின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்தவர் எம்.வி.முருகப்பா. 2017-ல் அவர் காலமான பிறகு, அவரது இடத்தில் இயக்குநர் குழுவில் தங்களுடைய இடத்தைக் கேட்டிருக்கிறார் அவரது மகள் வள்ளி அருணாச்சலம்.

    ஆனால், முருகப்பா குழுமத்தின் முக்கியப் பொறுப்புகளில் அக்குடும்பங்களைச் சேர்ந்த ஆண் வாரிசுகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளாக இதுவே நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

    வணிகம்

    ஆண் வாரிசு இல்லாத எம்.வி.முருகப்பா: 

    அக்குழுமத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவருக்கும் ஆண் வாரிசுகள் இருக்கவே, கேள்விகளே இன்றி பெண்கள் முக்கியப் பொறுப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இந்நிலையில், இயக்குநர் குழுவில் இடம் கேட்டு கொடுக்கப்படாத நிலையில், அக்குழுமத்தில் தங்களுடைய 8.15% பங்குகளை நியாயமான விலைக்கு வாங்கிக் கொள்ளவும் கேட்டிருக்கின்றனர். ஆனால், சந்தை விலையை விட குறைந்து விலைக்கு அவர்கள் வாங்கிக் கொள்ள முன் வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு முருகப்பா குழுமத்தின் மீது, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் வழங்குத் தொடர்ந்திருக்கிறார் வள்ளி அருணாச்சலம்.

    மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், எம்.வி.முருகப்பா குடும்பத்தினர் மற்றும் முருகப்பா குழுமத்திற்கு இடையே பரஸ்பர முடிவு எட்டப்பட்டிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

    வணிகம்

    வள்ளி அருணாச்சலத்திற்கு இயக்குநர் குழுவில் இடம் கிடைத்ததா? 

    இந்தப் பரஸ்பர முடிவில், இயக்குநர் குழுவில் வள்ளி அருணாச்சலத்திற்கான இடம் வழங்கப்படவில்லை. மாறாக, 8.15% பங்கை நியாயமான விலையில் அவர்கள் வாங்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    வள்ளி அருணாச்சலம், அனுக்கருப் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். மோட்டோரோலா, ஐபிஎம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது.

    பெண் என்ற ஒரே காரணத்தாலேயே, அவருக்கு இயக்குநர் குழுவில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட போராட்டத்திக்ருப் பின்பும், முடிவு வேறு விதமாக அமைந்திருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

    இதற்கு நேர்மாறாக, மற்றொரு இயக்குநர் ஒருவரின் உயிரிழப்பிற்குப் பின், ஆண் என்ற காரணத்தினாலேயே எவ்வித அனுபவமும் இல்லாத அவருடைய 23 வயது மகனுக்கு இயக்குநர் குழுவில் ஒரு இடத்தை முருகப்பா நிறுவனம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025

    வணிகம்

    சீனாவின் BYD ஆட்டோமொபைல் நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சீனா
    அக்டோபர் 1 முதல் அமலாகிறது ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான GST வரி விதிப்பு ஜிஎஸ்டி
    முதல் காலாண்டில் லாபத்தைப் பதிவு செய்த இன்டிகோ, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் CEO விமான சேவைகள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 3 தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    பாட்டா இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கவிருக்கும் அடிடாஸ், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பேச்சுவார்த்தை வணிகம்
    சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம் மத்திய அரசு
    இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: பிரிட்டன் கார்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறதா இந்தியா? பிரிட்டன்
    இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை வீட்டு கடன்

    சென்னை

    குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது திரௌபதி முர்மு
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  காவல்துறை
    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்  வைரஸ்
    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025