NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆசியாவின் முதல் சுற்றுலா படகு டாக்சி சேவையை உபெர் இந்தியாவில் தொடங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசியாவின் முதல் சுற்றுலா படகு டாக்சி சேவையை உபெர் இந்தியாவில் தொடங்கியது
    ஆசியாவின் முதல் சுற்றுலா படகு டாக்சி சேவை இந்தியாவில் தொடங்கியது

    ஆசியாவின் முதல் சுற்றுலா படகு டாக்சி சேவையை உபெர் இந்தியாவில் தொடங்கியது

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 02, 2024
    02:44 pm

    செய்தி முன்னோட்டம்

    உபெர் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் நீர் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் செயலி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் ஷிகாரா சவாரி எனும் படகு டாக்சிகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை வழங்குகிறது.

    உபெர் ஷிகாரா என அழைக்கப்படும் இந்தச் சேவையானது, ஜம்மு காஷ்மீரில் உள்ள உள்ளூர் ஷிகாரா ஓட்டுநர்களுக்கு ஆதரவளித்து சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    அறிமுகம் குறித்து பேசிய உபெர் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர் பிரப்ஜீத் சிங், காஷ்மீரின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பில் சுற்றுலாவை மேம்படுத்த பாரம்பரியத்துடன் தொழில்நுட்பத்தை இணைக்கும் நிறுவனத்தின் இலக்கை எடுத்துரைத்தார்.

    ஆசியா

    ஆசியாவின் முதல் நீர்வழி போக்குவரத்து டாக்சி சேவைகள்

    குறிப்பிடத்தக்க வகையில், உபெர் ஷிகாரா ஆசியாவிலேயே முதல் நீர்வழி படகு போக்குவரத்து டாக்சி சேவையாகும். வெனிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களில் இதே போன்ற சேவைகள் உள்ளன.

    ஆரம்பத்தில், உபெர் ஏழு ஷிகாராக்களுடன் சேவையில் இறங்கியுள்ளது. தேவையின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்படும்.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கிடைக்கும் இந்த சவாரிகளில், நான்கு பயணிகள் வரை செல்லலாம் மற்றும் அரசாங்கத்தால் நெறிமுறைப்படுத்தப்பட்ட கட்டணத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உபெர் ஷிகாரா ஆபரேட்டர்களிடமிருந்து எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. அனைத்து வருமானமும் நேரடியாக அவர்களுக்குச் செல்வதை உறுதிசெய்கிறது.

    முன்பதிவு

    முன்பதிவு செய்வது எப்படி?

    உபெர் செயலி மூலம் ஷிகாரா சவாரிக்கு முன்பதிவு செய்வது எளிது.

    பயணிகள் ஷிகாரா காட் எண் 16ஐத் தங்கள் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் புள்ளியாகத் தேர்ந்தெடுத்து, அவர்களின் நேரத்தையும் தேதியையும் தேர்வு செய்து, பயணத்தை உறுதிசெய்யலாம்.

    இந்த முயற்சியை ஷிகாரா உரிமையாளர்கள் சங்கம் பாராட்டியுள்ளது. மேலும், ஷிகாரா ஆபரேட்டர்கள் சேருவார்கள் என்று தலைவர் வாலி முகமது பட் நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்தச் சேவையானது பேரம் பேசுவதைத் தவிர்த்து, சுற்றுலாப் பயணிகளுக்கு நிலையான கட்டணங்களை உறுதி செய்யும் அதே வேளையில் உள்ளூர் வணிகத்தை மேம்படுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உபர்
    ஜம்மு காஷ்மீர்
    இந்தியா
    ஆசியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உபர்

    அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை அமெரிக்கா
    வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்திய ஊபர் ஆட்டோமொபைல்
    ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு  தமிழ்நாடு
    IT செயலிலழப்பிற்கு பரிகாரமாக $10 கிஃபிட் கூப்பன்களுடன் மன்னிப்பு கோரிய CrowdStrike நிறுவனம் தொழில்நுட்பம்

    ஜம்மு காஷ்மீர்

    சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி  பயங்கரவாதம்
    ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை இந்தியா
    சிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ என்ஐஏ

    இந்தியா

    குளிர்கால கூட்டத்திற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது மத்திய அரசு; முக்கிய மசோதாக்களின் பட்டியல் நாடாளுமன்றம்
    வாரத்தின் முதல்நாள் ஏற்றத்துடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை; அதானி நிறுவன பங்குகளும் மீண்டும் உயர்வு பங்குச் சந்தை
    அரசு விருந்தினராக இந்தியாவிற்கு வருகை தர மன்னர் சார்லஸ் திட்டம்: அறிக்கை மன்னர் சார்லஸ்
    யுபிஐ லைட் பயனர்களுக்கு ஆட்டோ டாப்-அப் சேவையை அறிமுகப்படுத்தியது பேடிஎம் பேடிஎம்

    ஆசியா

    வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே நெஸ்லே
    தென்கிழக்காசியாவில் யாகி சூறாவளியால் கடும் சேதம்; 500க்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம் சூறாவளி
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    21ஆம் நூற்றாண்டு நமக்கானது; இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025