NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையினால் குறையும் பெண் பணியாளர்கள் விகிதாச்சாரம்: TCS
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையினால் குறையும் பெண் பணியாளர்கள் விகிதாச்சாரம்: TCS
    பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 35.5 சதவீதமாக குறைந்துள்ளது

    அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையினால் குறையும் பெண் பணியாளர்கள் விகிதாச்சாரம்: TCS

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 15, 2024
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தொற்றுநோய் காலத்தில் நோய் பரவலை தவிர்ப்பதற்காக பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்(WFH) முறையை அமல்படுத்தியது.

    தொற்றுநோய் காலம் முடிவடைந்த உடன் பல நிறுவனங்கள் படிப்படியாக இந்த முறையை நீக்க துவங்கின.

    ஆரம்பத்தில் ஹைபிரிட் முறை, அதாவது வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் அலுவலகம் செல்வதும் மற்ற நாட்களில் WFH முறையில் பணி புரிவதும் என தேர்வு செய்யப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைத்து நிறுவனங்களும் தற்போது அலுவலகத்திலிருந்து பணி செய்வதை கட்டாயமாக்கிவிட்டது.

    இந்த வரிசையில் கடைசியாக இணைந்தது, நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ்.

    தற்போது இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சதவீதத்தில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை எட்டியுள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பெண் ஊழியர்கள்

    குறையும் பெண் ஊழியர்களின் விகிதாச்சாரம்

    இந்த செயல்முறையை நடைமுறைபடுத்த எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்தது என்று ஒப்புக்கொண்டார் டாடா குழுமத்தின் மனிதவளத் தலைவர் மிலிந்த் லக்காட்.

    இந்த நடைமுறைக்கு 18 மாதம் ஆனதாகவும், பல கடின முயற்சிகளுக்கு பின்னரே சாத்தியமானதாகவும் கூறினார்.

    6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணிபுரியும் நிறுவனத்தில், வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகங்களில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, முன்னர் அறிவித்த 70 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

    எனினும் இந்த செயல்முறையினால், இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 35.5 சதவீதமாக குறைந்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

    பணி நீக்கங்கள்

    பணி நீக்கங்களும், அதிகரிக்கும் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களும்

    ஒரு நபரை பணியமர்த்தும்போது, அவரின் ​​திறமையை உற்பத்தி செய்வதை அதன் பொறுப்பாக டிசிஎஸ் நிறுவனம் உணர்கிறது.

    மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் திறன் பொருந்தாத தன்மைகள் அல்லது மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னரும், உற்பத்தித்திறன் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே, பணிநீக்கங்கள் நடைபெற வேண்டியது கட்டாயமாகிறது என்றார் லக்காட்.

    இதற்கிடையில், தொழில்முறை பரீட்சைகளின் நேர்மையைத் தொடர்ந்து தேசிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆளுமை மற்றும் நெறிமுறைகள் மீதான கவனம் தொடர வேண்டும் என்று லக்காட் கூறினார்.

    புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் தகுதிவாய்ந்த பொறியாளர்கள் என்று எஸ்பிஐ வெளிப்படுத்தியதில், நாடு ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான பொறியாளர்களை உருவாக்குகிறது என்றும், திறமைகள் கிடைப்பது குறித்து டிசிஎஸ் எந்த கவலையையும் பார்க்கவில்லை என்றும் லக்காட் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிசிஎஸ்
    தொற்று நோய்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    டிசிஎஸ்

    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்! டாடா
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்? இந்தியா
    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்? இந்தியா
    டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்? இந்தியா

    தொற்று நோய்

    இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர் கொரோனா
    ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன? வைரஸ்
    உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை' தொற்று
    ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான் ஜப்பான்

    தொழில்நுட்பம்

    பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்? ஓபன்ஏஐ
    வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்திய ஊபர் உபர்
    பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பிரதமர் மோடி
    இந்திய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் அமைச்சகங்கள் தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி? கூகுள்
    மனிதர்களின் வாழ்நாளை கணிக்கும் AI-யை வடிவமைத்த டென்மார்க் ஆராயச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு
    பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு பொங்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025