
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு செபி தலைவர் மற்றும் அவரது கணவர் மறுப்பு அறிக்கை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவர் சமீபத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக நிராகரித்துள்ளார்.
செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் ஷார்ட்-விற்பனை மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ள அதானி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு ஆதாயம் பெற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், அதானி நிறுவனத்திற்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் அவர்களுக்கு பங்குகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
எனினும், இதை மறுத்துள்ள செபி தலைவர், அதிகாரிகள் கோரினால் தனது எந்தவித நிதி ஆவணத்தையும் வெளியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதானி அறிக்கை
செபியை தொடர்ந்து அதானி குழுமம் அறிக்கை வெளியீடு
"ஹிண்டன்பர்க் அறிக்கை - ஒரு சிவப்பு ஹெர்ரிங்" என்ற தலைப்பில் அதானி குழுமமும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதானி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ஹிண்டன்பர்க்கின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் பொதுவில் கிடைக்கக்கூடிய சில தகவல்களைத் தேர்ந்தெடுத்து, தனிப்பட்ட லாபம் ஈட்டுவதற்காக உண்மைக்கு புறம்பான வகையில் திரித்து வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதானி குழுமத்திற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள அவர், இவை இந்திய உச்சநீதிமன்றத்தால் முழுமையாக விசாரிக்கப்பட்டு, ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பல பொது ஆவணங்களில் தொடர்புடைய அனைத்து விவரங்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு, தங்கள் வெளிநாட்டு ஹோல்டிங் அமைப்பு முற்றிலும் வெளிப்படையானது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அதானி அறிக்கை
Adani Group issues a statement on the latest report from Hindenberg Research.
— ANI (@ANI) August 11, 2024
The latest allegations by Hindenburg are malicious, mischievous and manipulative selections of publicly available information to arrive at pre-determined conclusions for personal profiteering with… pic.twitter.com/WwKbPLTkrv